ஓட்டு போட போகாதீங்க...வீட்டுல இருங்க... அமெரிக்க தேர்தலில் பரபரப்பை கிளப்பிய மர்ம போன் மிரட்டல்கள்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுவாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க செல்ல வேண்டாம் என மர்ம போன் மிரட்டல்கள் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி வருகின்றன. 2016 தேர்தலில் மொத்தம் 13.9 கோடி பேர் வாக்களித்தனர்.
இம்முறை இதைவிட கூடுதலாக வாக்கு பதிவு எண்ணிக்கை இருக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. வெல்லப்போவது யார்?
இதனிடையே சில இடங்களில் ரோபோ கால்கள்- மூலமாக வாக்காளர்கள், வாக்களிக்க செல்லாமல் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.