அமெரிக்க கலவரம்... எம்பிகளை கொல்ல திட்டமிட்ட கலவரக்காரர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்: கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறையில் அந்நாட்டு எம்பிகளை கொல்ல கலவரக்காரர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 80க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல்
இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட ஜேக்கப் சான்ஸ்லி என்பவரைக் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கலவரத்தின்போது துணை அதிபர் மைக் பென்ஸின் இருப்பிடத்தில் அவரை மிரட்டும் வகையில் ஜேக்கப் சான்ஸ்லி கடிதம் ஒன்றை விட்டுவிட்டுச் சென்றார். அதில், "நேரம் நெருங்குகிறது. நீதி நிலைநாட்டப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது.

கொல்ல திட்டம்
இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "இந்தக் கடிதத்தின் அடிப்படையிலும் பாதுகாப்புப் படையினர் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், கலவரக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிடித்துக் கொல்ல திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

யார் இந்த ஜேக்கப் சான்ஸ்லி
துணை அதிபர் மைக் பென்ஸுக்கு மிரட்டும் கடிதம் எழுதியிருப்பவர் ஜேக்கப் சான்ஸ்லி. இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க வன்முறையில் ஈடுபட்டார் என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், சான்ஸ்லி போதைப்பொருள் பழக்கம், மன ரீதியான பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரால் சமூகத்திற்கு ஆபத்து என்றும் தெரிவித்தார். கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நாடாளுமன்ற கட்டடத்தில் கொம்புகளை தலையில் மாட்டியவாறு இருப்பவர்தான் ஜேக்கப் சான்ஸ்லி.

நடவடிக்கை
அமெரிக்கக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை அந்நாட்டுக் காவல் துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த போட்டோக்கள், வீடியோக்கள் அடிப்படையிலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அந்நாட்டுக் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவசர நிலை
மேலும், புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவின் போது மீண்டும் வன்முறை ஏற்படுவதைத் தடுக்க தலைநகர் வாஷிங்டனில் ஜனவரி 21ஆம் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக சுமார் 20 ஆயிரம் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications