சிக்னலை ஆப் செய்துவிட்டு.. ஈரான் பக்கத்தில் சென்ற அமெரிக்காவின் ராட்சசன்! அடுத்து நடக்கும் பயங்கரம்
வாஷிங்டன்: ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது, போராடும் மக்களை ஒடுக்கினால்.. உதவிக்கு அமெரிக்கா வரும் என்றும் கூறியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலைக்கார ராட்சத கப்பல் ஒன்று, தனது சிக்னலை ஆஃப் செய்துவிட்டு சைலன்டாக ஈரான் பக்கத்தில் நகர்ந்திருக்கிறது. இனி அடுத்து என்ன ஆகுமோ என்கிற அச்சம் மத்திய கிழக்கு முழுவதும் பரவியிருக்கிறது.
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் எனும் போர்க்கப்பல்தான் தற்போது ஈரானுக்கு அருகில் நகர்ந்திருக்கிறது. இந்த கப்பலுடன் மேலும் சில சிறிய போர்க்கப்பல்களும் ஈரான் அருகே சென்றிருக்கின்றன.

அச்சுறுத்தும் கப்பல்
இந்த கப்பலை ஒரே குண்டில் மூழ்கடிக்க முடியும் எனில், அது அணு ஆயுதத்தால் மட்டுமே முடியும். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து, இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இதே கப்பல் ஈரான் அருகே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அப்படி பார்த்தால் இன்று நடப்பது புதிய விஷயம் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், இதற்கு முன்னர் இந்த கப்பல் பயணிக்கும் பாதைகள் உலக நாடுகளுக்கு வெளிப்படையாக தெரிந்தது.
இந்திய பெருங்கடலில் பயணம்
இக்கப்பல் தனது சிக்னலை ஆன் செய்து வைத்து பயணித்து வந்தது. ஆனால், தற்போது முதன் முறையாக, சிக்னலை ஆஃப் செய்துவிட்டு இக்கப்பல் இந்திய பெருங்கடலில பயணித்திருக்கிறது. எனவே கப்பல் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே சிரமமான காரியமாக மாறியிருக்கிறது. இந்த ஒரு கப்பலை தனியாக சமாளிப்பதே ரொம்பவும் கஷ்டமான வேலை.
அப்படி இருக்கையில், இந்த கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களை டிரம்ப் அனுப்பியிருக்கிறார். எனவே மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
90 விமானங்கள்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பலில் 90க்கும் அதிகமான போர் விமானங்கள் இருக்கின்றன. இதில் அதிநவீன F-35C போர் விமானங்களும் இருக்கிறது. இந்த விமானங்களும், இந்த கப்பலும், உடன் வரும் சிறிய போர்க்கப்பல்களும் நூற்றுக்கணக்கான இலக்குகளை துல்லியமாக ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டவை.
3ம் உலகப்போர்
விஷயம் சீரியஸாக மாறுவதை உணர்ந்த ஈரான், தனது ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டிருக்கிறது. ஒருவேளை அமெரிக்கா எங்களை தாக்கினால், நாங்கள் நடத்தும் பதில் தாக்குதல் ஒரு முழு போரை உருவாக்கும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல்












Click it and Unblock the Notifications