Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகம் அழியும் தேதி இதுதான்.. அடித்து சொல்லும் பாபா வங்கா- பகீர் கணிப்பு! இது என்ன அப்படியே நடக்குது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நம்மில் அனைவருக்கும் வரும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் பாபா வங்கா என்ற பெண்ணுக்கு வரும் காலத்தைப் பார்க்கக் கூடிய ஆற்றல் இருந்ததாக நம்பப்படுகிறது. அவர் பூமியில் வரும் காலத்தில் என்ன நடக்கும்.. பூமி எப்போது அழியும் என்பது குறித்துக் கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

பாபா வங்கா என்றும் அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவாவுக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது. சிறு வயதில் மின்னல் தாக்கியதில் பாபா வங்கா தனது கண் பார்வையை இழந்தார். இருப்பினும், அவருக்கு அப்போது தான் எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றல் கிடைத்ததாக நம்பப்படுகிறது.

baba vanga world offbeat

பாபா வங்கா: பல்கேரிய நாட்டை சேர்ந்த இவர் 1996இல் தனது 85 வயதில் உயிரிழந்தார்.. இருப்பினும், அதற்கு முன்பே அவர் வரும் காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த துல்லியமான கணிப்புகளை மேற்கொண்டுள்ளார். உலகெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்கள் அவரை தீர்க்கதரிசி என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு அவரால் துல்லியமாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்துள்ளது.

இவர் பல விஷயங்களை இதற்கு முன்பும் துல்லியமாகக் கணித்துள்ளார். அதில் முக்கியமானது நியூயார்க்கில் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலாகும். இந்த தாக்குதல் நடக்கும் முன்பே அவர், "இரண்டு உலோகப் பறவைகள் நம் அமெரிக்கச் சகோதரர்கள் மீது மோதும்.. ஓநாய்கள் புதர்களில் இருந்து ஊளையிடும்.. அப்பாவிகளின் ரத்தம் ஆறுகளாக ஓடும்" என்று பதிவிட்டிருந்தார். அவர் சொன்னது போலவே தான் தாக்குதல் நடந்தது.

துல்லியமான கணிப்புகள்: இது தவிர செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கூட இவர் துல்லியமாகக் கணித்திருந்தார். இதன் காரணமாகவே இவரது கணிப்புகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோல இவர் வரும் ஆண்டுகளுக்கும் சேர்த்தே கணிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக இந்த உலகம் எப்போது அழியும் என்பதையும் அவர் கணித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

பலரும் காலத்திற்கு அவர் செய்த கணிப்புகள் குறித்துப் பார்க்கலாம்:

2025: ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் நடக்கும். இதனால் ஐரோப்பிய கண்டத்தின் மக்கள்தொகையில் கணிசமாகக் குறையும்.

2028: மனிதர்கள் வீனஸ் கிரகத்திற்கு அடைவார்கள். புதிய முறையில் ஆற்றல் தயார் செய்வது குறித்து தீவிர முயற்சியில் இறங்குவார்கள்.

2033: பூமியின் இரு துருவங்களிலும் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் குறிப்பிடத்தக்க உயரும்.

2076: உலகம் கம்யூனிசம் பக்கம் திரும்பும்
.
2130: வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படும்.

2170: உலகளாவிய மிகக் கடுமையான ஒரு வறட்சி ஏற்படும்.

3005: செவ்வாய்க் கிரகத்தில் ஒரு போர் நடக்கும்.

3797: பூமியின் அழிவு தொடங்கும். அதேநேரம் மனிதக்குலம் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்குச் செல்ல திறன் கொண்டதாக மாறும்

5079: உலகம் அழியும்.

இதுவரை பாபா வங்கா விட்டுச் சென்ற பல கணிப்புகள் நடந்துள்ள நிலையில், வரும் காலத்தில் அது நடக்கலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+