கொசுக்கள் ஏன் மனிதர்களை அதிகம் கடிக்கின்றன தெரியுமா? மர்மம் உடைத்த அமெரிக்க ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: மனிதர்களை அதிகளவில் கொசு கடிப்பதற்கான காரணத்தை அமெரிக்காவை சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
கொசுக்கடி வாங்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுந்தால் ஆம் என்று சொல்லும் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.
உருவத்தில் மிகச்சிறிதாக இருந்துகொண்டு மனிதர்களை பாடாய் படுத்தி விடுகின்றன கொசுக்கள்.

குறையாத கொசுக்கடி
கொசுக்களால் தூக்கத்தை மட்டுமின்றி உயிரையே தொலைத்துவிடுகின்றனர் கோடிக்கணக்கான மனிதர்கள். அந்த அளவுக்கு ஆபத்தான உயிரினமாக அது இருக்கிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை வைத்தே கொசுக்கடியில் இருந்து தவிர்க்க சாதாரண காயில்கள் தொடங்கி கொசு பேட், மின்சாதன கருவி என பல பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. எல்லாத்தையும் வாங்கியாச்சு... ஆனால், கொசுதான் குறைந்தபாடில்லை என்று புலம்பும் மனிதர்களில் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்.

கொசுக்கடி பற்றி ஆய்வு
இப்படி மனிதர்களின் நிம்மதியை கெடுக்கும் கொசுக்களை நெருங்கவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கொசுக்கள் ஏன் அதிகளவில் மனிதர்களை கடிக்கின்றன என்ற ஆய்வும் நடந்து வருகிறது. உலகில் உள்ள பல கோடிக்கணக்கான உயிர்களில் மனிதர்களைதான் கொசுக்கள் விரும்பி கடிக்கும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
இதற்கான காரணத்தைதான் தற்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கிறது. அதை நேச்சர் (Nature) என்ற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கொசுக்கள் வாசனையை வைத்தே விலங்குகளை அதிகம் நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருக்கும் சிட்ரஸ் அமில வாசனை (எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் இருப்பது) கொசுக்களை ஈர்க்கின்றனவாம்.

மரபணு ஆராய்ச்சி
டெங்கு, ஜிகா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்கு காரணமான ஏடிஸ் இன கொசுக்கள் விலங்குகளை விட மனிதர்களின் வாசனையை விரும்புவதை அறிந்த விஞ்ஞானிகள், கொசுக்களின் மூளை எந்தெந்த வாசனைகளை எந்த அளவுக்கு விரும்புகின்றன என்பதை அறிய முயற்சித்தனர். இதற்காக கொசுக்களை மரபணு ரீதியாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் விதவிதமான வாசனைகளில் அவற்றின் மூளையின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்டறிந்துள்ளனர்.

இதுதான் காரணம்
இதற்காக 16 மனிதர்கள், 2 எலிகள், 3 பன்றிகள், 2 காடைகள், ஒரு ஆடு, 4 நாய்களின் ரோமங்கள், கம்பளி மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்த விஞ்ஞானிகள் அவற்றை கொசுக்களை வைத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது மனிதர்களின் ரோமங்கள் கொசுக்களை அதிகம் ஈர்த்துள்ளன. இதற்காக கொசுக்களின் மூளையில் 2 ரசாயனங்கள் உருவாகின்றன. அவை டெகனால், அண்டெகனால் என அழைக்கப்படுகின்றன. ஆரஞ்சு, சிட்ரஸ் வாசனை கொண்ட அவை மனித வாசனையால் செறிவூட்டப்பட்டுள்ளன. இதுதான் மனிதர்களை கொசுக்கள் ஈர்ப்பதற்கான காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications