மாநில உரிமைகளை கையில் எடுக்கும் எடப்பாடி.. அதிமுக பிரச்சாரம் தேர்தலில் எதிரொலிக்குமா?
சென்னை; வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக தனது தேர்தல் பரப்புரையை "தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் வெறும் வாக்கியத்துக்காக மட்டுமே இதை சொல்வதாக தெரியவில்லை.காரணம் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் தொடங்கிய நாள்முதலே கொடுக்கும் பதிலடிகள் எல்லாம் நெற்றியடியாகவே உள்ளது.
இயல்பாகவே எடப்பாடி பழனிசாமி என்றும் பா.ஜ.க வை விமர்சனம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவந்தது. ஆனால் இந்த தேர்தல் பரப்புரையில் பா.ஜ.க வை நேரடியாகவே
தாக்கியுள்ளார். கச்சத்தீவு விஷயத்தில் பத்து வருடம் சும்மா இருந்த பா.ஜ.க என காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பா.ஜ.க ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினையின் போது 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த கட்சி அண்ணா திமுக என்று மேடைகளில் கர்ஜித்த போது இவர் பழைய பழனிசாமி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
நீட் விவகாரத்தில் பா.ஜ.க வுடன் அப்போது கூட்டணியில் இருந்தாலும் எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த பழனிசாமி 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடை ஆளுநரை மீறி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டினார்.
கூட்டணியில் இருந்த போதே குறிவைத்து அடித்தவர் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பிரச்சாரங்களில் அவரின் புதிய அவதாரத்தை காணமுடிகிறது. இது அதிமுகவிற்கு கூடுதல் தெம்பையும், தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது
இதை தொடர்ந்து, ஆந்திர அரசாங்கம் பாலாற்றில் தடுப்பணை கட்டுவதால் தமிழகத்தின் வடமாநிலங்கள் பாதிக்கப்படும் இதற்கு எதிராக ஒலித்த முதல் எடப்பாடி பழனிசாமியின் குரல். ஆனால் இதுவரை ஆளுங்கட்சி இதற்கு எந்தவொரு பதிலையும் தந்தாக தெரியவில்லை.
இப்படி தமிழ்நாட்டு உரிமைக்காகவும், இழந்த உரிமையை மீட்பதற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் என்னென்ன யுக்திகளை கையாள போகிறார் இது தேர்தலில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளே சொல்லும்












Click it and Unblock the Notifications