லட்சுமி குபேர பூஜை

Subscribe to Oneindia Tamil

Lakshmiதீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு லட்சுமி குபேர பூஜை. இந்தப் பூஜை செய்வது செல்வம் பெருக வழி வகுக்கும்.

குபேர பூஜை பற்றி அறியும் முன் நராகசுரன் சம்ஹாரம் பற்றிப் பார்ப்போம்.

நரகசுரன் பல வரங்களையும் பெற்று தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.

அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடையும் போது மந்தார மலை மத்தாக பயன்படுத்தப்பட்டது. அதை நிறுத்த ஆதாரமாக மகாவிஷ்ணு கூர்மஅவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மலையை தாங்கி பிடித்துக் கொண்டார்.

அப்போது பூமா தேவிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் மகனாக பிறந்தவன்தான் நரகாசுரன். பூமா தேவி சத்யாபாமாவாக உருவெடுத்து கிருஷ்ணாவதாரத்தின்போது கிருன்ணனை மணந்து கொண்டார். இதனால் சத்யபாமாவுக்கு பூமாதேவியின் அம்சம் உண்டு.

கிருஷ்ணாவதாரத்தில் கம்சனை சம்ஹாரம் செய்தபின் துவாரகையில் ருக்மணியை மணம் புரிந்து கொண்டார் கிருஷ்ணர். அதன் பின் சத்யபாமாவை மணம் புரிந்துகொண்டார்.

இந் நிலையில் தேவேந்திரன் நரகாசுரனின் கொடுமைகள் குறித்து கூறியதும் பாமாவுடன் நராகசுரனை சம்ஹாரம் செய்ய கிளம்பினார் கிருஷ்ணர்.

Krishna Killing Naragasuranநரகாசுரனின் தாய் பூமாதேவியான சத்யபாமா. தந்தை கிருஷ்ணரான மகா விஷ்ணு.

தந்தை மகனை கொல்ல துணியலாம். ஆனால், தாய் துணிவாரா? மனம் வருமா? வரும். மகன் அசுரானாகி துன்பம் தருவதால் அவனை கொல்ல தாயும்தயங்கமாட்டாள் என்று உணர்த்தத்தான் பாமாவுடன் சென்று நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கிருஷ்ணர்.

பிராக்ஜோதிடபுரத்தின் அரசனாக இருந்த நரகாசுரனைக் கொன்ற பின் அவனது மகனான பகதத்தனை அரசனாக நியமித்தார் கிருஷ்ணர்.

அவனும் தன் தந்தையை கிருஷ்ணர் கொன்றதில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று காட்டும் விதமாக கிருஷ்ணர் வரும் போதெல்லாம் வெடிகள்,மத்தாப்புகள் கொளுத்தி அவரை வரவேற்றான்.

ஆண்டு தோறும் கிருஷ்ணர் வரும் போது பட்டாசு வெடித்து தீப ஆளி (தீப வரிசை) வைத்து நகரை அலங்கரித்ததால் நரகாசுரன் இறந்த நாள் தீபாவளி என்றுபெயர் பெற்றதாக ஒரு வரலாறு கூறுகிறது.

குபேர பூஜை:

நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணராகிய மகாவிஷ்ணுவின் மார்பில் குடி கொண்டிருப்பவள் லட்சுமி. நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தன்று விஷ்ணுவையும் அவர்மனைவியான லட்சுமியையும் பணத்திற்கு அதிபதியான குபேனையும் பூஜித்தால் பஞ்சமில்லாமல் பணம் பெருகும் என்பது ஐதீகம்.

லட்சுமி படத்தையும், குபேர யந்திரத்தையும் வைத்து பூக்களுடன் பணம், காசுகளையும் போட்டு பூஜை செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு முன் பூஜை துவங்கப்படவேண்டும்.

குத்துவிளக்கின் 5 முகங்களும் ஏற்றப்பட்டு பூஜை செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+