இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாதாமே? சாஸ்திரம் சொல்வது என்ன?
திருப்பதி: திருப்பதிக்கு சில ராசிக்காரர்கள் மட்டும் போகவேக் கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருப்பதி சென்றால் திருப்பம் என கூறுவார்கள். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் திருப்பதிக்கு ஒரு முறை போய்விட்டு வந்தால் அந்த கஷ்டங்களுக்கு தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை.
பணக்கஷ்டம் இருந்தால் திருப்பதிக்கு திங்கள்கிழமைகளில் சென்று வர வேண்டும் என்கிறார்கள். அது போல் வியாழக்கிழமைகளில் எளிய சேவையான பஞ்சகட்சம், துளசி மாலை அணிந்துள்ள பெருமாளை சந்தித்தால் கோடி புண்ணியம்.

இந்த நிலையில் திருப்பதி பயணம் எல்லோருக்குமே வளர்ச்சியை தருமா என்றால் அது இல்லை. யார் திருப்பதிக்கு சென்றுவந்தால் அவர்கள் வீட்டில் கெடுதல் நடக்கிறதோ அவர்கள் திருப்பதிக்கு செல்வதை தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் மட்டும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாது என்கிறார்கள். அதாவது ஆண்டுக்கு ஒரு முறை செல்லலாம். ஆனால் அடிக்கடி செல்ல வேண்டாம் என்கிறார்கள். சிம்ம ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய 3 ராசிக்காரர்கள் திருப்பதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.
எப்போதும் சென்று வந்தால் கடனாளி ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு பிறருக்கு உண்மையாக நடந்துள்ளது என தெரியவில்லை. ஒரு வேளை விதிப்படி ஒருவர் கடனாளியாகவே இருக்க வேண்டும், அப்படியேதான் இருப்பார். இதில் கோயில் மீது தவறு சொல்லக் கூடாது என்று்ம கூறுகிறார்கள்.
அப்படியென்றால் திருப்பதிக்கு ஆண்டுதோறும் கூட்டம் குறையத்தானே வேண்டும். ஏன் அதிகரித்து வருகிறது என்ற கேள்வியும் உள்ளது. எனவே இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் அவரவர் மனதை பொருத்தது. அந்த 3 ராசிக்காரர்களில் தனுசு ராசிக்காரர் ஒருவர் அடிக்கடி திருப்பதி சென்றுதான் வந்தார். அவருக்கு கடன் இருந்தது. ஆனாலும் நன்றாகத்தான் இருந்தார். இன்னொரு கும்ப ராசிக்காரரும் அடிக்கடி திருப்பதி சென்றார், ஆனால் அவருக்கு கடன் ஏதும் ஏற்படவில்லை.
இந்த 3 ராசிக்காரர்களும் திருப்பதிக்கு செல்ல ஆசைப்பட்டால் அவர்கள் உண்டியலை காணிக்கையாக எடுத்துக் கொண்டு அதில் கிடைக்கும் பணத்தில் பயண செலவு போக மீதமுள்ளதை திருப்பதி உண்டியலில் போட்டுவிடலாம். எது எப்படியோ திருப்பதிக்கு செல்ல நாம் என்னதான் பிளான் போட்டாலும் வெங்கடாஜலபதி அழைத்தால்தான் எல்லாமே கைக் கூடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications