இந்த 3 ராசிக்காரர்களை தவிர வேறு யாரும் காலில் கருப்பு நிற கயிறை கட்டக் கூடாது தெரியுமா?
சென்னை: இந்த 3 ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது நல்லது என்கிறது சாஸ்திரம். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை தவிர்த்துவிடலாம். திருஷ்டிக்காக கட்டப்படும் இந்த கருப்பு கயிற்றை யாரெல்லாம் கட்டலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பகல் 12 மணி அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தனியாக சென்றால் கருப்பு பொட்டு வைக்க வேண்டும் என நம் மூதாதையர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது போல் கருப்பு கயிறு கட்டினால் காத்து கருப்பு அண்டாது என்பதம் ஐதீகம்.

கழுத்திலோ, கைகளிலோ கறுப்பு கயிறு கட்டுவதை விட கால்களில் கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். சிலருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கறுப்பில் கட்டி விடுவார்கள். அதெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது. பெண்கள் கொலுசு, மெட்டி அணிவதை கட்டாயமாக்கினர் நம் முன்னோர்கள்.
குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக்கினர்.
கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது. இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர்.
இந்த கறுப்பு கயிறு எல்லாம் கட்டலாமா? கறுப்பு கயிறு எல்லோருக்கும் நல்ல பலன்களைத் தருமா என்று பார்க்கலாம். கறுப்பு கயிறு கட்டும்போது சனிபகவானை வேண்டிக்கொண்டு காலில் கருப்பு கயிறு கட்டினால் கண்திருஷ்டி படாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும்.
இந்த கிரகங்கள் வலிமை குறைந்து இருந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.
சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவ ஆலயங்களுக்கோ சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்து இந்த கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை அன்று வேண்டிக்கொண்டு கையில் கட்டினால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.
சனி பகவான் முதலில் ஒருவரது கால்களைத்தான் பிடிப்பார். எனவேதான் கால்களை சரியாக கழுவ வேண்டும் என்பார்கள். அது போல் கருப்பு கயிறை காலில் கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். அத்துடன் ராகு, கேது பாதிப்புகளும் ஏற்படாது. கருப்பு கயிறு கட்டியதும் சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.
அந்த கருப்பு கயிற்றில் 9 முடிச்சுகள் போட வேண்டும். கருப்பு கயிற்றை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் அணியலாம். சிலருக்கு கருப்பு ஆகாவிட்டால் சிகப்பு கயிறும் கட்டுகிறார்கள். இந்த கயிறுகளால் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி மகரம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த கருப்பு கயிற்றை கட்டலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications