Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிழிந்த போட்டோவை குளியல் அறையில் வைக்காதீங்க.. பாத்ரூம் டைல்ஸ் அழுக்கா இருக்கா? இந்த வாஸ்து பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அதை முதலில் சரிசெய்துவிட வேண்டுமாம். அந்தவகையில், குளியல் அறையில் சில பொருட்களை வைக்கவே கூடாது என்றும், சில பொருட்களை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது. அதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சில பொருட்களை தெரியாமல்கூட குளியலறையில் வைக்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. குறிப்பாக, கிழிந்த மற்றும் பிய்ந்துபோன செருப்புகளை குளியலறையில் வைக்கக்கூடாதாம்.. இதனால், எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் அதிகரித்து, குடும்பத்தில் மேலும் குழப்பமும், வறுமையும் சூழ்ந்துவிடும் என்கிறார்கள்.

spirituality vastu tips bathroom

குளியலறையில் ஈரமான துணிகளை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. துவைப்பதாக இருந்தால் மட்டுமே துணிகளை ஊறவைத்து, துவைத்து, உடனே காய வைத்துவிட வேண்டும். ஈரத்துணிகளை வைத்திருப்பது, துர்சக்திகளை வீட்டுக்குள் அழைத்து வருவதற்கு சமமாகிவிடுமாம். அதேபோல, உடைந்த கண்ணாடிகள், உடைந்த பக்கெட்டுகளை வைத்திருக்கக்கூடாது. அந்த பக்கெட்டுகளையும் காலியாக வைக்காமல் தண்ணீர் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

குளியலறை குழாய்கள்:

குளியலறை குழாய்களை அடிக்கடி சரிசெய்து கொள்ள வேண்டும். தண்ணீர் வராமலும் இருக்கக்கூடாது. தண்ணீர் சிந்திக்கொண்டே இருக்கக்கூடாது.. இவையாவுமே துரதிருஷ்டத்தின் அறிகுறியாகும்..

எப்போதுமே குளியலறை ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்திருக்க வேண்டும். பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக இருந்தால் வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாகிவிடுமாம். எனவே, டைல்ஸை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.

பரிகாரம் பெஸ்ட்:

அதேபோல கிழிந்த போட்டோக்களையும் குளியலறையில் ஒட்டி வைக்கக்கூடாது.. வேண்டுமானால் குளியலறையில் படிகாரம் ஒன்றை வைக்கலாம். இதனால் பூச்சிகள் குளியலறைக்குள் நுழையாமல் இருக்கும்.. வாஸ்துதோஷத்தையும் நீக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை யாரும் பார்த்திராத இடத்தில் தான் வைக்க வேண்டுமாம்.

அதேபோல, குளியலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நிறங்களும் முக்கியமானவை.. கருப்பு வாளியை வைக்க கூடாது என்பார்கள்.. இதனாலும் குடும்பத்தில் சிக்கல்கள் வருமாம்.. கருப்புக்கு பதிலாக, பச்சை நிறத்தில் பக்கெட்டுகளை பயன்படுத்தினால் சனி மற்றும் ராகுவின் தோஷங்களிலிருந்து பாதுகாக்கப்படலாம். மேலும், இந்த பச்சை நிறம் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.

நிறங்கள் முக்கியம்:

அதேபோல, சுவர்கள் நீல நிறத்தை பூசுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.. ஒருவேளை டைல்ஸ் பதிவதாக இருந்தாலும், அதையும் நீல நிறத்திலேயே பதியலாம்.. பச்சை நிறம் பயன்படுத்த முடியாத சூழலில், பக்கெட்டுகள், மக்குகளை, நீலநிறத்திலேயே பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+