கிழிந்த போட்டோவை குளியல் அறையில் வைக்காதீங்க.. பாத்ரூம் டைல்ஸ் அழுக்கா இருக்கா? இந்த வாஸ்து பாருங்க
சென்னை: உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அதை முதலில் சரிசெய்துவிட வேண்டுமாம். அந்தவகையில், குளியல் அறையில் சில பொருட்களை வைக்கவே கூடாது என்றும், சில பொருட்களை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது. அதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சில பொருட்களை தெரியாமல்கூட குளியலறையில் வைக்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. குறிப்பாக, கிழிந்த மற்றும் பிய்ந்துபோன செருப்புகளை குளியலறையில் வைக்கக்கூடாதாம்.. இதனால், எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் அதிகரித்து, குடும்பத்தில் மேலும் குழப்பமும், வறுமையும் சூழ்ந்துவிடும் என்கிறார்கள்.

குளியலறையில் ஈரமான துணிகளை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. துவைப்பதாக இருந்தால் மட்டுமே துணிகளை ஊறவைத்து, துவைத்து, உடனே காய வைத்துவிட வேண்டும். ஈரத்துணிகளை வைத்திருப்பது, துர்சக்திகளை வீட்டுக்குள் அழைத்து வருவதற்கு சமமாகிவிடுமாம். அதேபோல, உடைந்த கண்ணாடிகள், உடைந்த பக்கெட்டுகளை வைத்திருக்கக்கூடாது. அந்த பக்கெட்டுகளையும் காலியாக வைக்காமல் தண்ணீர் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
குளியலறை குழாய்கள்:
குளியலறை குழாய்களை அடிக்கடி சரிசெய்து கொள்ள வேண்டும். தண்ணீர் வராமலும் இருக்கக்கூடாது. தண்ணீர் சிந்திக்கொண்டே இருக்கக்கூடாது.. இவையாவுமே துரதிருஷ்டத்தின் அறிகுறியாகும்..
எப்போதுமே குளியலறை ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்திருக்க வேண்டும். பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக இருந்தால் வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாகிவிடுமாம். எனவே, டைல்ஸை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
பரிகாரம் பெஸ்ட்:
அதேபோல கிழிந்த போட்டோக்களையும் குளியலறையில் ஒட்டி வைக்கக்கூடாது.. வேண்டுமானால் குளியலறையில் படிகாரம் ஒன்றை வைக்கலாம். இதனால் பூச்சிகள் குளியலறைக்குள் நுழையாமல் இருக்கும்.. வாஸ்துதோஷத்தையும் நீக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை யாரும் பார்த்திராத இடத்தில் தான் வைக்க வேண்டுமாம்.
அதேபோல, குளியலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நிறங்களும் முக்கியமானவை.. கருப்பு வாளியை வைக்க கூடாது என்பார்கள்.. இதனாலும் குடும்பத்தில் சிக்கல்கள் வருமாம்.. கருப்புக்கு பதிலாக, பச்சை நிறத்தில் பக்கெட்டுகளை பயன்படுத்தினால் சனி மற்றும் ராகுவின் தோஷங்களிலிருந்து பாதுகாக்கப்படலாம். மேலும், இந்த பச்சை நிறம் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
நிறங்கள் முக்கியம்:
அதேபோல, சுவர்கள் நீல நிறத்தை பூசுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.. ஒருவேளை டைல்ஸ் பதிவதாக இருந்தாலும், அதையும் நீல நிறத்திலேயே பதியலாம்.. பச்சை நிறம் பயன்படுத்த முடியாத சூழலில், பக்கெட்டுகள், மக்குகளை, நீலநிறத்திலேயே பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications