குளியலறை நீரில் இதை சேர்த்து பாருங்க! எண்ணெய் குளியலுக்கான நேரம்? இரவில் தூக்கத்துக்கு பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: எண்ணெய்க்குளியல் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? எண்ணெய் குளியலுக்கு ஏற்ற நேரம் எது? தலைக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் என்னென்ன? இரவு நேரங்களில் குளிப்பது நன்மை தரக்கூடியது? இதுகுறித்து ஆன்மீகம் சொல்வதென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எப்போதுமே, சூரியன் உதயமாகி, 6 நாழிகைக்கு மேலுள்ள நேரத்தில்தான் குளிப்பதற்கான சரியான நேரம்.. காலை 8.24 மணிக்கு மேல், மாலை 3.36 மணிக்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாம்.

3 முக்கிய எண்ணெய்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்றையும் சமமாகக் கலந்து உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட்டு குளிப்பதே சிறப்பான முறை.. அதிலும் புதன், சனிக்கிழமைகள் எண்ணெய் குளியலுக்கான நாளாகும். இதில், ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளியும் குளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளித்தால், குடும்பத்தில் வறுமை வந்துவிடுமாம்..
எப்போதும் தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. அப்படிசாப்பிட்டால், குளிர்ச்சித்தன்மையால் உடலில் நொதிகள் சுரக்க தடை ஏற்படும்.. இதனால் மந்தம், அஜீரணம் உண்டாகும்.. தலைக்கு குளித்துவிட்டு சாப்பிட்டால், உணவிலுள்ள சத்துக்கள் நேரடியாக உடலில் உறிஞ்சப்பட்டு, ஆற்றலாக வலுப்பெறும்.
இரவில் குளிப்பது நல்லதா
குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிக்கக்கூடாதாம்.. இதனால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன் குடும்ப மகிழ்ச்சியும் சிதைந்துவிடுமாம்.
அதேபோல, காலையில் குளிப்பதை விட, இரவில் அதாவது காலையில் குளிப்பதை விட, இரவில் குளிப்பதுதான், அதிக பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன
இரவில் குளித்தால், பகலில் உடலில் தேங்கி கிடக்கும் உஷ்ணம் வெளியேறி, குளிர்ச்சி கிடைக்கும்..இது ஆரோக்கியமான தூக்கத்துக்கு வழிவகுக்கிறது.. இரவில் குளித்தால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.. அதிலும் வெதுவெதுப்பான நீரில் குளித்தால், தசைகளுக்கு தளர்வு கிடைக்கும்.. இதனால் மனபதட்டம், மன அழுத்தமும் தணிந்து அமைதி கிடைக்கும்..
இரவு நேர குளியல் - நன்மை
கோடை காலத்தில் இரவில் குளிப்பது மிகவும் நல்லது.. இது உங்கள் தசைகளை அமைதிப்படுத்தவும், சோர்வை நீக்கவும் உதவும்.
இரவில் குளிக்கும் நீரில் லாவெண்டர் ஆயில் அல்லது கெமோமில் டீயை கலந்து குளித்தால், உடலின் வெப்பம் இறங்கும்.. சிறிது கற்றாழையை நீரில் கலந்து குளித்தால் சருமத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
அதேபோல இரவில் குளிப்பதற்கு முன்பும், குளித்து முடித்த பிறகும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.. உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கவே கூடாது.. அதுமட்டுமல்ல, அதிகப்படியான வியர்வையால் குறையக்கூடிய அளவை நிரப்ப உதவும் வகையில் எப்சம் சால்ட்டை, குளிக்கும் தண்ணீரில் சேர்த்து கொள்வது இன்னும் நல்லது.
நல்ல தூக்கத்துக்கு பெஸ்ட் டிப்ஸ்
இரவு நேர குளியலை சரியாக செய்யாவிட்டால், சளி பிடித்தல் அல்லது உடலின் இயற்கையான வெப்பநிலை ஒழுங்குமுறையை சீர்குலைப்பது போன்ற சில உடல் உபாதைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு குளித்துவிட்டு தூங்க செல்லும்முன்பு, சோம்பு தண்ணீர் அல்லது சோம்பு டீ குடித்து விட்டு படுக்கலாம்.. இதனால் உடலிலுள்ள கலோரிகள், கொழுப்புகள் சீராகும். அத்துடன், இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமடைந்து, வயிற்றை சுற்றியிலுள்ள தேவையற்ற சதைகளை கரைக்க இந்த சோம்பு நீர் உதவும்.
மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நிம்மதியான தூக்கத்துக்கு சோம்பு நீர் வழிவகுக்கும். மூலிகை டீயும் குடிக்கலாம்.
தூங்க போவதற்கு முன்பு, ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பாதங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யலாம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications