வீட்டில் நெய் தீபம் ஏற்படுத்தும் கோடி பலன்கள்.. அதென்ன 1 நாள், 1 மணி நேரம், 1 நெய் விளக்கு பரிகாரம்?
சென்னை: வீட்டில் நெய் தீபம் ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பார்கள்.. கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியை பெருக்கவும், குடும்பத்திலுள்ள நிதி நெருக்கடியை விலக்கவும், அக்னி புராணத்தின்படி நெய் தீபம்தான் சிறந்தது என்பது முன்னோர்களின் வாக்காகும். அதேபோல, தர்மத்தின்படி வீட்டில் நெய் தீபம் ஏற்றுவதால் கோடி பலன்கள் கிடைக்கும். அந்தவகையில் நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் நன்மைகள், பலன்கள் என்னென்ன? நெய் தீபத்தை ஏற்ற வேண்டியவர்கள் யார் யார்? பணவரவுக்கு எப்படி நெய்தீபம் ஏற்றலாம்? என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நெய் தீபத்தில், கலைமகளான சரஸ்வதி தேவியும், தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாகவும், இதனால் நெய் தீபத்தை ஏற்றும்போது, 3 தேவிகளும் எழுந்தருளி கடாட்சம் தருவதாகவும் நம்பப்படுகிறது. எனவே, பரிகாரத்தை செய்வதற்கும் நெய் தீபம் பயன்படுகிறது.

தொழிலில் விருத்தி
உதாரணத்துக்கு சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அல்லது வேறுவகையான நிதி சிக்கல் என்றால், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி பன்னிரண்டு முறை சுற்றி 48 நாட்களுக்கு 48 நெய் தீபத்தினை ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.. இதனால் தொழில் வழக்கு சாதகமாக வரும். வழக்குகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பில்லி, சூனியம் பிரச்சனைகள் இருந்தால், 21 நாட்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில், வடக்கு திசையை நோக்கி நெய் தீபம் ஏற்றிவரலாம்..
நாகங்கள் பின்னிப்பிணைப்பு
கணவன் மனைவிக்குள் விரிசல் காணப்பட்டால், 2 நாகங்கள் பின்னிப்பிணைந்துள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றிவைத்து, இறுதியாக சம்பந்தப்பட்ட தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் போதும், பிரிந்துள்ள தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள்.
இன்னல்கள், சிக்கல்கள், பிரச்சனைகள், கடன்கள் எதுவாக இருந்தாலும்சரி, கோயிலில் நெய்தீபம் ஏற்றிவைத்து, பிரகாரத்தை 3 முறை வலம் வந்தாலே பலன் கிடைக்கும்.. ஆனால், கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதாக இருந்தால், நண்பகல், அந்திப்பொழுதில், நெய் தீபம் ஏற்றலாம்.
காலை மாலை நேரங்கள்
வீட்டில் ஏற்றுவதாக இருந்தால், பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஏற்றலாம்.. இதனால் நேர்மறை தாக்கம் வீடெல்லாம் பரவுவதுடன், சுற்றுச்சூழலில் பாக்டீரியா, வைரஸ்களின் எண்ணிக்கையும் குறையும்.. காற்றும் சுத்தமாகி, ஆரோக்கியத்தை பெருக்குகிறது.. அல்லது மாலை 6 மணி நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பாக சொல்லப்படுகிறது
பண்டிகை நாட்களாக இருந்தால் 5 திரிகளிலும், பிற நாட்களில் 2 திரிகளிலும் நெய்தீபம் ஏற்றலாம்..
வீட்டில் பசுநெய்யில் தீபம் ஏற்றி பிரார்த்திக்கும்போது அது நிறைவேறுகிறது.. மண் விளக்கில் பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்றினால், அதிலிருந்து வெளியேறும் புகையானது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க செய்கிறது.. தோஷங்களையும், தீவினைகளையும் அகற்ற செய்கிறது..
பூஜையறை, சமையலறை
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குரிய ஹோரையான காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் நெய் தீபம் ஏற்றி, வீட்டின் பூஜையறை அல்லது சமையலறையில் வடக்கு பார்த்து ஏற்றி வைக்கலாம். இப்படி ஒரே ஒரு நெய் தீபத்தை வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் வீட்டில் ஏற்றி வைப்பதன் மூலம், பணவரவையும் பெருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications