புரட்டாசி பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்
திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பெளர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெளர்ணமி இன்று செப்டம்பர் 28 தேதி வியாழக்கிழமை மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப எல்லா ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 28ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05க்கு திருவண்ணாமலை சென்றடையும். 29ஆம் தேதி அதிகாலை 3.45க்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.05க்கு சென்னை வந்தடையும். பெளர்ணமி கிரிவலத்துக்காக இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களும் வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications