ஸ்ரீவில்லிபுத்தூர் டூ திருப்பதி செல்லும்.. ஆண்டாளின் மங்கலப் பொருட்கள்.. என்னென்ன தெரியுமா?
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியுள்ள பிரம்மோற்சவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெறும் கருட சேவையின்போது ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து வழிபடுகின்றனர். பண்டிகைக் காலங்களில், விடுமுறைக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிரம்மோற்சவம் தொடங்கியுள்ள நிலையில் வண்ண விளக்குகள், தோரணங்களால் விழாக்கோலத்தில் ஜொலிக்கிறது.

அக்டோபர் 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ கொடியேற்றத்தை தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் அம்மாநில முல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். முதல்வருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள மூலவர் வடபத்ரசயனர் எனும் பெரிய பெருமாளுக்கு தினந்தோறும் பூஜை செய்யப்படும். இந்த வழிபாட்டின்போது ஆண்டாள் சூடிய மாலையையே பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல, மதுரையிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேரோட்டம் பெருமாளுக்கு ஆண்டாளின் மங்களப் பொருள்கள் அனுப்பப்படும்
திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போத ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். இதற்கு ஆண்டாளுக்கு மறு சீர் கொடுக்கும் வகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கள்ளழகர் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் உடுத்துவதற்காக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல, ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தன்று அணிவதற்காக திருப்பதி ஏழுமலையான் அணிந்து கலைந்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு ஆண்டாளுக்காக அனுப்பிவைக்கப்படும். அதன்படி, நடப்பு ஆண்டு பிரம்மற்சோவ விழாவில் மூலவரான வெங்கடேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளின் பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) அன்று மலையப்ப சுவாமி மோகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். அன்றைய தினம் மாலை கருட சேவையின்போது ஆண்டாளின் பூ மாலை அணிந்துகொண்டு மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப்பெரிய பூ மாலை தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், ஆண்டாள் அணிந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெருமாளுக்காக திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications