Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா.. பக்தர்களுக்கு இலவச பேருந்துகள்.. என்னென்ன ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

திருநள்ளார்: காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ந் தேதி
சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது முதலே சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Thirunallar temple sani peyarchi 2023 Free buses for devotees says Minister Namachivayam

வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள். இதனையடுத்து திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்தும், பக்தர்களுக்கு போலீஸ் தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு, சுமார் 1400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் 150க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வரும் பக்தர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 7 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

திருநள்ளாறு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வரும் டிசம்பர் 17ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிவரை கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு காவல்துறை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்.

புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து இந்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். காவல்துறை மூலம் "மே ஐ ஹெல்ப் யூ" பூத்கள் பல இடங்களில் நிறுவப்படும். இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.

சனிப்பெயர்ச்சி முன் ஏற்பாடுகள் தவிர, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+