Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி சொர்க்கவாசல்.. ஏழுமலையானுக்கு 10 நாட்களில் வசூலான காணிக்கை.. கொட்டிக் கொடுத்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக கடந்த 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 40.18 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் முடி காணிக்கை மட்டுமல்லாது தங்களது வேண்டுதல்களுக்காக பொன், பொருள் என உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

Tirupati Vaikunta Ekadasi Sorgavasal Tiruappu 10 days Devotees hundial amount Rs.40 crore says TTD

திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராபத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருமலைக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்தனர்.

சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஜனவரி 2ஆம் தேதி திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசன், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி ஆகிய 3 இடங்களில் உள்ள கவுன்டர்கள் திறக்கப்பட்டு, இந்த கவுன்டர்கள் மூலம் மீண்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

Tirupati Vaikunta Ekadasi Sorgavasal Tiruappu 10 days Devotees hundial amount Rs.40 crore says TTD

இந்த நிலையில் கடந்த 10 நாள்களில் சொர்க்கவாசல் வழியாக 6.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 40.18 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர். இவர்களில் 2.13 லட்சம் பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டையடித்து தலைமுடி காணிக்கையும் செலுத்தியுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் வசூலான காணிக்கை குறித்த தகவலையும் திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒரு வருடத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜூலையில் 129 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக நவம்பரில் 108 கோடி ரூபாயும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+