திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி.. டிசம்பரில் என்னென்ன திருவிழாக்கள்
சென்னை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிறப்பு உற்சவங்கள் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது.
மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். பெருமாள் ஆலயங்களில் திருப்பாவை வழிபாடு நடைபெறும். அதிகாலையில் திருப்பல்லாண்டு பாடி வழிபடுவார்கள். திருமலை திருப்பதியில் மிகவும் கோலாகலமாக உற்சவங்கள் நடத்தப்படும். மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது வழக்கம்.

வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து திருமாலை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் திருப்பதியில் மார்கழி மாத உற்சவங்கள் மிகவும் முக்கியமானதாகும்.
டிசம்பர் 03 - கார்த்திகை வனபோஜன உற்சவம்
டிசம்பர் 08 - சர்வ ஏகாதசி
டிசம்பர் 12 - அத்யாயன உற்சவங்கள் துவக்கம்
டிசம்பர் 17 - தனுர் மாதம் மார்கழி மாத பிறப்பு
டிசம்பர் 22 - சின்ன சாத்து முறை
டிசம்பர் 23 - வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு. தங்க ரத உற்சவம்
டிசம்பர் 24 - வைகுண்ட துவாதசி, ஸ்ரீ சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கோட்டி
டிசம்பர் 26 - மார்கழி பவுர்ணமி கருட சேவை
டிசம்பர் 28 - பிரணயகால மகோற்சவம் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் சுப்ரபாத சேவையுடன் தான் வழிபாடுகள் துவங்கும். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்கள் தான் திருமலையில் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications