தென்னாடுடைய சிவனே போற்றி! ஏன் வடநாட்டு சிவன் என சொல்வதில்லை தெரியுமா?
சென்னை: தென்னாடுடைய சிவனே போற்றி என்கிறோமே, ஏன் வடநாட்டு சிவன் என சொல்வதில்லை என்பதற்கான காரணம் தெரியுமா?
தென் நாட்டை போல் வடமாநிலங்களிலும் சிவனை மக்கள் வழிபடுகிறார்கள். சிவராத்திரி அன்று அவர்கள் தங்கள் கைகளாலேயே சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். இதை அவர்கள் வடநாட்டில் மட்டுமில்லை, பிழைப்பதற்காக சென்னை வந்திருந்தாலும் கூட அங்கும் அதே பழக்கத்தை செய்கிறார்கள். மேலும் விரதமிருக்கிறார்கள். சிலர் பிரதோஷங்களை கூட வழிபடுகிறார்கள்.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். பொதுவாக வடஇந்தியர்கள் துர்கா, சிவன், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுகிறார்கள். அப்படியிருக்கும் போது வடநாடுடைய சிவனே என ஏன் அழைப்பதில்லை என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்னாடுடைய சிவனே போற்றி! அப்படின்னா வடநாட்டு சிவன்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள். தென்னாட்டு சிவன்தான் அசல்.
வடநாட்டு சிவன் அப்படியல்ல. ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். இது இங்குள்ள சைவமரபு.
தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல. இங்கு கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை.
வடநாட்டில் தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட.
அதற்காக அங்கு தீண்டாமை இல்லை என்பது அர்த்தமல்ல. படைப்புத் தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு.
தென்னாட்டில் எல்லாத்தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார்.
அது மறைத்தல், அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப் பட்டுள்ளார். இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவதுதான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டுமே. எனவே தென்னாடுடைய சிவனே போற்றி! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவெனில் எந்த நாட்டில் உள்ளோரும் உன்னை (இறைவனாக) இறையாகக் கண்டு போற்றுகிறார்கள்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications