Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னாடுடைய சிவனே போற்றி! ஏன் வடநாட்டு சிவன் என சொல்வதில்லை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னாடுடைய சிவனே போற்றி என்கிறோமே, ஏன் வடநாட்டு சிவன் என சொல்வதில்லை என்பதற்கான காரணம் தெரியுமா?

தென் நாட்டை போல் வடமாநிலங்களிலும் சிவனை மக்கள் வழிபடுகிறார்கள். சிவராத்திரி அன்று அவர்கள் தங்கள் கைகளாலேயே சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். இதை அவர்கள் வடநாட்டில் மட்டுமில்லை, பிழைப்பதற்காக சென்னை வந்திருந்தாலும் கூட அங்கும் அதே பழக்கத்தை செய்கிறார்கள். மேலும் விரதமிருக்கிறார்கள். சிலர் பிரதோஷங்களை கூட வழிபடுகிறார்கள்.

spirtuality sivan

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். பொதுவாக வடஇந்தியர்கள் துர்கா, சிவன், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுகிறார்கள். அப்படியிருக்கும் போது வடநாடுடைய சிவனே என ஏன் அழைப்பதில்லை என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்னாடுடைய சிவனே போற்றி! அப்படின்னா வடநாட்டு சிவன்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள். தென்னாட்டு சிவன்தான் அசல்.

வடநாட்டு சிவன் அப்படியல்ல. ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். இது இங்குள்ள சைவமரபு.

தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல. இங்கு கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை.

வடநாட்டில் தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட.
அதற்காக அங்கு தீண்டாமை இல்லை என்பது அர்த்தமல்ல. படைப்புத் தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு.

தென்னாட்டில் எல்லாத்தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார்.

அது மறைத்தல், அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப் பட்டுள்ளார். இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவதுதான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டுமே. எனவே தென்னாடுடைய சிவனே போற்றி! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவெனில் எந்த நாட்டில் உள்ளோரும் உன்னை (இறைவனாக) இறையாகக் கண்டு போற்றுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+