Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'டெக்’ துறையில் ஜாக்பாட்.. டெல், ஹெச்பி.. 32 லேப்டாப் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்திக்கு ரெடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் லேப்டாப் மற்றும் டேப்லெட் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள 32 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‛மேக் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இந்த திட்டம் என்பது அனைத்து துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவித்து வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Dell, HP among 32 firms applied to make laptops locally under PIl scheme says Aswini Vaishnaw

இதன் ஒருபகுதியாக தான் மத்திய அரசு சார்பில் பிஎல்ஐ எனும் (production linked incentive) திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் என்பது ரூ.17,000 கோடி மதிப்பில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை என்பது வழங்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடிக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், ரூ.2,430 கோடி முதலீட்டை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில் தான் பிஎல்ஐ திட்டத்தில் செயல்பட மொத்தம் எத்தனை நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ள என்பது பற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கி கூறினார். இதுபற்றி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

‛‛ஐடி ஹார்ட்வேர் உற்பத்திக்கான பிஎல்ஐ(production linked incentive) திட்டத்தின் கீழ் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவற்றை தயாரிக்க டெல், ஹெச்பி, ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிமஸ் உள்பட 32 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல உலகளாவிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து உற்பத்தி செய்ய உள்ளனர்'' என்றார்.

இருப்பினும் இன்று மாலை வரை ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய வில்லை. இன்று கடைசி நாள் என்ற நிலையில் அந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யவில்லை. இருப்பினும் விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்ப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+