'டெக்’ துறையில் ஜாக்பாட்.. டெல், ஹெச்பி.. 32 லேப்டாப் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்திக்கு ரெடி
டெல்லி: மத்திய அரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் லேப்டாப் மற்றும் டேப்லெட் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள 32 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‛மேக் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இந்த திட்டம் என்பது அனைத்து துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவித்து வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக தான் மத்திய அரசு சார்பில் பிஎல்ஐ எனும் (production linked incentive) திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் என்பது ரூ.17,000 கோடி மதிப்பில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை என்பது வழங்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடிக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், ரூ.2,430 கோடி முதலீட்டை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில் தான் பிஎல்ஐ திட்டத்தில் செயல்பட மொத்தம் எத்தனை நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ள என்பது பற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கி கூறினார். இதுபற்றி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
‛‛ஐடி ஹார்ட்வேர் உற்பத்திக்கான பிஎல்ஐ(production linked incentive) திட்டத்தின் கீழ் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவற்றை தயாரிக்க டெல், ஹெச்பி, ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிமஸ் உள்பட 32 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல உலகளாவிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து உற்பத்தி செய்ய உள்ளனர்'' என்றார்.
இருப்பினும் இன்று மாலை வரை ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய வில்லை. இன்று கடைசி நாள் என்ற நிலையில் அந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யவில்லை. இருப்பினும் விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்ப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications