நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?
சென்னை: இந்தியா முழுக்க இன்று கிட்டத்தட்ட 90 சதவிகித ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த மெசேஜ் மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்ட்ராய்டு போன் இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்கள் அடிப்படையில் சிறிய கணினிகள் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். நாசா மூலம் நிலவிற்கு மனிதன் அனுப்பப்பட்ட போது நாசாவிடம் இருந்ததை விட பெரிய தொழில்நுட்பம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது

ஆண்ட்ராய்டு போன் பயன்பாடு இந்தியாவில் அதிகம் ஆகி உள்ள நிலையில்தான் தற்போது இந்திய அரசு மூலம் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு முக்கியமான ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது. இன்று அனுப்பப்பட்ட மெசேஜில் "This is a SAMPLE TESTING MESSAGE sent through Cell Broadcasting System by Department of Telecommunication, Government of India. Please ignore this message as no action is required from your end. This message has been sent to TEST Pan-India Emergency Alert System being implemented by National Disaster Management Authority. It aims to enhance public safety and provide timely alerts during emergencies." என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை மெசேஜ் ஆகும் இது. உங்கள் தரப்பில் இந்த மெசேஜ் தொடர்பாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அகில இந்திய அவசர எச்சரிக்கை சிஸ்டத்தின் சோதனைக்காக இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது மக்களின் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக இந்த சோதனை செய்யப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
என்ன காரணம்?: மக்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெசேஜ் இந்திய தேசிய பேரிடர் ஆணையம் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜ் ஆகும். பேரிடர் காலங்களில் இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அவசர மெசேஜ் அனுப்புவதை சோதிக்கும் விதமாக இந்த டெஸ்ட் செய்யப்பட்டது.

உதாரணமாக போர் காலங்களில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு உள்ளிட்ட அவசர மெசேஜ்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இன்று அரசு மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பின் தரம், வேகம் ஆகியவை குறித்து சோதனை செய்யும் விதமாக அடிக்கடி இந்த சோதனை அரசு மூலம் செய்யப்படுகிறது . அதன்படி ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு இன்று பிற்பகல் 1.35 மணிக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம், சுனாமி, தீவிரவாத தாக்குதல், போர் சமயங்களில் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அலர்ட் மெசேஜ் அனுப்பப்படும். அதுதான் இன்று சோதனையும் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இந்த அமைப்பு உள்ள நிலையில் இந்தியாவிலும் சோதனை செய்யப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications