சிகரெட் ரூம்ல நிறைய சீக்ரெட் இருக்கு.. கருமம்.. பிக்பாஸ் குறித்து கஞ்சா கருப்பு பகீர்!
சென்னை: பிக்பாஸ்ல சிகரெட் பிடிக்கும் அறையில் என்னென்னவோ நடக்கிறது என கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதலாம் பாகத்திலிருந்தே ஸ்கிரிப்டட் என அனைவரும் பேசி வந்தனர். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்து நிகழ்ச்சியை வைரலாக்க சண்டை, சச்சரவுகளை ஏற்றி விடுகிறார்கள் என பேசப்பட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் கஞ்சா கருப்பு போட்டியாளராக பங்கேற்றார். இவர் மிகவும் கோபக்காரர் என பெயர் பெற்றார். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட சிலிண்டரை கொண்டு பரணியை அடிக்க சென்றுவிட்டார்.
இரண்டாவது வாரம்
இதையடுத்து இரண்டாவது வாரமே இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காமலேயே இருந்து சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அண்மையில் ஒரு டிவி சேனலில் கஞ்சா கருப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கஞ்சா கருப்பு
இதற்கு கஞ்சா கருப்பு பதில் கூறுகையில் பிக்பாஸுக்கு அப்பறம் வாழ்க்கையே மாறிவிடும் என்றார்கள். ஆனால் எனக்கு ஒரு கருமமும் மாறவில்லை. ரொம்ப அக்கபோராகத்தான் இருக்கிறது. பிக்பாஸ் பிக்பாஸ்னு சொல்றத எல்லாம் நம்பாதீங்கய்யா, அவங்க ஒரு கோமாளிங்க. பிக்பாஸே ஒரு போலியானது.
அரை குறை டிரஸ்
அரையும் குறையுமா டிரஸ் போட்டுகிட்டு நம் வீட்டில ஒரு பெண் பிள்ளை இருந்தா எப்படி நம்ம கஷ்டப்படுவோம். அது போல் பிக்பாஸ் வீட்டுக்குள்ள பெண் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள். புகைப்பிடிக்கும் அறையில் ஒரு ஆணும் சிகரெட் பிடிக்கிறார், ஒரு பெண்ணும் சிகரெட் பிடிக்கார். இடையில் அங்கு வேறு என்னவெல்லாமோ நடக்கிறது.
சிகரெட்டை தாண்டி என்னென்னவோ நடக்குது
பிக்பாஸ் பிக்பாஸுன்ற பேரை கேட்டாலே எரியுது. என் கையில் கத்தி மட்டும் இருந்திருந்தால் அங்கேயே குத்தி செத்திருப்பேன். சிகரெட்டை தாண்டி அங்கு என்னென்னவோ நடக்குது. எரியுற நெருப்பில ஏன் எண்ணெய்யை ஊற்றுகிறீர்கள் என பேட்டியை பாதியிலேயே முடித்து கொண்டார் கஞ்சா கருப்பு.