Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கடைசியாக அழுதது வரலட்சுமிக்காக தான்.. அந்த வீடியோவை பார்த்து.. ஓப்பனாக பேசிய விஷால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் மதகஜராஜா திரைப்பட வெற்றி விழாவில் வரலட்சுமி குறித்து பேசி இருக்கிறார். நான் எந்த விஷயத்திற்காகவும் அழ மாட்டேன் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்வேன் ஆனால் கடைசியாக அழுதது வரலட்சுமிக்காக தான் என்று விஷால் பேசி இருக்கிறார்.

சில வாரங்களாகவே நடிகர் விஷால் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக காணப்படுகிறது. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா தற்போது ரிலீசாவதற்கு முன்பு ப்ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போது விஷால் அதில் கலந்துகொண்டபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

television vishal jayam ravi

அதுவரைக்கும் கம்பீரமாக பார்த்த விஷால் முகம் எல்லாம் வீங்கி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டு, மைக்கை கூட கையால் பிடிக்க முடியாது அளவிற்கு கைகள் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தது. இதை பார்த்ததும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இவர் இப்படி மாறிவிட்டார் என்பதுதான் பலருடைய கேள்வி. அதுவரைக்கும் அவரை ட்ரோல் செய்தவர்கள் கூட விஷாலுடைய உடல் நிலையை பார்த்து பதறிப் போனார்கள். அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று கூறி வந்தார்கள்.

அதே நேரத்தில் யூடியூபர்கள் சிலர் விஷால் குறித்து அவதூறு பரப்பி வந்ததையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் மதகஜராஜா திரைப்பட ரிலீஸின் போது விஷால் பழைய நிலைக்கு கெத்தாக திரும்பி இருந்தார். அதோடு தனக்கு வைரஸ் காய்ச்சல் தான் பாதிக்கப்பட்டு இருந்தது, அந்த நேரத்தில் காய்ச்சல் அதிகமாக இருந்தாலும் நான் சுந்தர் சி கூப்பிட்டதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

television vishal jayam ravi

ஆனால் என்னை எத்தனை மக்கள் ரசிப்பார்கள் என்று எனக்கு தெரியாது எனக்கு அந்த நிகழ்ச்சி தான் மக்களுக்கு என் மீது இருக்கும் அன்பை தெரியப்படுத்தியது என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் தற்போது மதகஜராஜா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது இந்த திரைப்படத்திற்கான வெற்றி விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட விஷால் தனக்காக பிரேயர் பண்ணினவர்களுக்கும், தான் மீண்டும் நலம் பெற வேண்டும் என்று போன் செய்து பேசியவர்களுக்கும் மெசேஜ் செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். அதோடு வரலட்சுமி குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் இதுவெல்லாம் ஒரு விஷயமா என்று எனக்கு நானே சொல்லிகொள்வேன்.

television vishal jayam ravi

எனக்கு கண்ணாடி முன்பு பேசும் பழக்கம் இருப்பதால் எனக்கு நான் தான் எப்போதும் ஆறுதல் சொல்லிக் கொள்வேன். ஆனால் கடைசியாக நான் அழுதது வரலட்சுமிக்காகத்தான்‌ வரலட்சுமி நடித்த அனுமான் படத்தில் தேங்காய் வைத்து பைட்டு சீன் வரும். அந்த சீனைப் பார்த்ததும் நான் அழுதுவிட்டேன். காரணம் வரலட்சுமி நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்காங்க.

அவங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல என்று தான் நான் சொல்வேன். என்னை விட இந்த சமுதாயத்தில் அதிகமானோர் அழகாகவும் திறமையாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்கு செல்லமே படத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் நல்ல வாய்ப்பு அதிகமா கிடைத்திருக்கிறது. ஆனால் அதுபோல வாய்ப்பு கிடைக்காமல் வரலட்சுமி பீல் பண்ணி இருக்கிறார். அதை நினைத்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது என்று அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+