Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஸ்ட்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர், நேரில் சென்று வெளுத்து வாங்கிய நடிகை.. சோசியல் மீடியாவே அதிருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைத்து நடைபெறும் ஆபாசமான மெசேஜ்கள், அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை அஸ்வினி மணிவண்ணன் எடுத்த நடவடிக்கை தற்போது பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் நடிகை அஸ்வினி மணிவண்ணன், தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரின் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு, அந்த நபர் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி, பல பெண்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Actress Ashwini Tamil cinema vijay tv

இந்த நிலையில், நேற்று அந்த ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை நேரில் கண்டுபிடித்து, அவர் வேலை பார்க்கும் கடைக்கே தனது கணவருடன் சென்று அவரை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார், அந்த நபரை அடித்ததை லைவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அஸ்வினி மணிவண்ணன் விளம்பர படங்கள், குறும்படங்கள் மட்டுமின்றி சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தன் கருத்துகள், புகைப்படங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

தற்போதைய விவகாரத்தில், அஸ்வினி எடுத்த நடவடிக்கையை பலர் பாராட்டி வருகின்றனர். "ஆபாசமாக பேசுபவர்களுக்கு இதுபோன்ற தைரியமான எதிர்வினை தேவை", "ஒரு பெண் அமைதியாக இருந்தால் தான் பலர் தைரியமாக அத்துமீறுகிறார்கள்" என ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில், ஒரு சிலர் "நீ நடிகை தானே, இதுபோன்ற மெசேஜ்களை புறக்கணித்திருக்கலாம்", "தெருவில் போட்டு அடிப்பது சரியா?" என கேள்வி எழுப்பி, அந்த நபருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தான் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் பலர், "நடிகையாக இருந்தாலும் சரி, சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த பெண்ணிடமும் ஆபாசமாக பேச யாருக்கும் உரிமை இல்லை", "இந்த மாதிரி நபர்கள் தான் சமூக ஊடகங்களில் பெண்களை மனதளவில் பாதித்து, அவர்களின் குடும்ப வாழ்க்கையையே சிதைக்கிறார்கள்", "பயந்து அமைதியாக இருந்தால் குற்றவாளிகள் தைரியம் பெறுவார்கள்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம், பெண்களின் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற நடத்தை ஆகியவை குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. சட்ட வழிகளை பின்பற்றுவது அவசியம் என்பதோடு, பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு சமூக ரீதியான கண்டனமும் அவசியம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

நடிகை அஸ்வினி மணிவண்ணன் எடுத்த இந்த நடவடிக்கை சரியா, தவறா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாகிறது. பெண்களை ஆபாசமாக பேசுவது, அவர்களை பொருளாக நினைப்பது எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

நடிகையாக இருந்தாலும் சரி, சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் சமமாக கிடைக்க வேண்டிய உரிமை. இந்த விவகாரம், சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த ஒரு எச்சரிக்கை மணி ஆக மாற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+