Soundarya: சவுந்தர்யாவின் ரூ.100 கோடி சொத்து.. 6 ஏக்கர் நிலம்.. மோகன் பாபுவிடம் விசாரணையா?: பிரபலம்
சென்னை: சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டது உண்மைதானா? நிலத்தை தரமுடியாது என்று சவுந்தர்யா சொன்னது உண்மைதானா? அப்படியானால் இப்போது அந்த சொத்து மோகன் பாபு கையில் எப்படி சென்றது? அந்த இடத்தில் கெஸ்ட் அவுஸ் கட்டி மோகன் பாபு எப்படி குடியிருக்கிறார்? இவைகளை எல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று சிட்டிமல்லு புகாரில் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும் இதில், மோகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்படுமா? புகாரில் தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது போகப்போகதான் தெரியும்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "சவுந்தர்யா ஒரு கட்சியில் சேர்ந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அதன்படியே கட்சியில் இணைந்தார்.. முதல்தடவையாக பிரச்சாரத்துக்கும் செல்கிறார்.. பெங்களூரிலிருந்து கரீம் நகர் என்ற இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்..

ஹெலிகாப்டரில் ஏறும் முன்பு, ஆர்வி உதயகுமாருக்கு ஏர்போர்ட்டிலிருந்து ஒரு போன் செய்தார்.. "சார், நான் அரசியலில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னை இவ்வளவு பெரிய உயரத்துக்கு நடிகையாக்கி, மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது நீங்கள்தான்.. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததும் நீங்கள்தான்.. உங்களுக்கு என்னுடைய நன்றிகள் சார்" என்று சொல்லி உள்ளார்.
இதை ஏன் திடீர்னு சொல்றீங்க? என்று ஆர்வி உதயகுமார் கேட்டதற்கு, "என்னமோ தெரியல, உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சார் என்று கூறியிருக்கிறார் சவுந்தர்யா.
2 மாத சிசு சவுந்தர்யாவின் வயிற்றில்
பிறகு, உடனே ஹெலிகாப்டரில் ஏறினார்.. கொஞ்ச தூரம்தான் ஹெலிகாப்டர் பறந்தது.. உடனே பல்டி அடித்து, தீப்பற்றி எரிந்தது.. சவுந்தர்யா, அவரது சகோதரர், சகோதரருக்கு நெருக்கமான 2 பேர், சவுந்தர்யாவின் உதவியாளர்கள் என அத்தனை பேரும் ஹெலிகாப்டரில் இறந்துவிட்டார்கள.. அப்போது 2 மாத சிசு சவுந்தர்யாவின் வயிற்றில் இருந்ததாக கூறப்பட்டது.
சவுந்தர்யா இறந்துவிட்டதாக, இரவு 10.30 மணிக்கு தகவல் வந்தது.. ஆனால், யாருமே அதை நம்பல.. எனவே, மீண்டும் மீண்டும் மீடியாவில் உண்மைத்தன்மை ஆராயப்பட்டது. மறுநாள்தான், அவரது மரண செய்தி உறுதிப்படுத்தப்பட்டது... மொத்த தமிழக மக்களும் அதிர்ச்சியானார்கள்.. எந்த கிசுகிசுவிலும் சவுந்தர்யா சிக்கியதில்லை.. ஆடம்பரத்தில் சிக்கியதில்லை.. எந்த திமிரான செயலும் செய்ததில்லை.
சவுந்தர்யாவின் பிளஸ் பாயிண்ட்ஸ்
சில நடிகைகள் அழகாக இருப்பார்கள், ஆனால் நடிப்பு பிரம்மாதமாக இருக்காது. சிலர் திறமையாக நடித்தாலும், அழகாக என்று எனறு சொல்ல முடியாது. ஆனால், சவுந்தர்யா நடிக்கவும் செய்தார், அழகாகவும் இருப்பார். இரண்டுமே சவுந்தர்யாவுக்கு பிளஸ் பாயிண்ட்... சவுந்தர்யா இறந்த தினத்தை தமிழக மக்கள், துக்க நாளாகவே அன்று கருதினார்கள்..
சிட்டிமல்லு என்ற சமூக ஆர்வலர், புகார் ஒன்றை தந்துள்ளார்.. சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலம், இப்போது நடிகர் மோகன் பாபுவிடம் உள்ளதாக கூறியிருக்கிறார்.. மோகன் பாபு தெலுங்கில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.. சீனியர் நடிகர்.. ரஜினியின் நெருங்கிய நண்பரும்கூட.. மோகன்பாபு குடும்ப விழாக்களில் ரஜினியும், ரஜினியின் குடும்ப விழாக்களில் மோகன்பாபுவும் கலந்து கொள்வார்கள்.
6 ஏக்கர் நிலம் - தகராறு
ஆனால், சமீபகாலமாகவே, மோகன்பாபு மீது பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. குடும்பத்தில் சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக தகராறு நடந்து, அவை எல்லாம் மீடியாவிலும் வெளியானது. ஆனால், இயல்பாகவே மோகன் பாபு முரட்டுத்தன்மை கொண்டவர் என்பதை கேள்விப்பட்டுள்ளேன்.
சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்தை மோகன் பாபு கேட்டிருக்கிறார்.. ஆனால், சவுந்தர்யா தன்னுடைய நிலத்தை தர மறுத்துவிட்டார்... இந்நிலையில்தான், சவுந்தர்யாவின் ஹெலிகாப்டர் விபத்தே சதிதான் என்று சிட்டிமல்லு புகாரில் கூறியிருக்கிறார்..
சொத்து கேட்டும் தரவில்லையா
முதலில் இது கொலையல்ல விபத்து என்றார்கள், ஆனால், இப்போது கொலை என்றும், கொலைக்கும், மோகன்பாபுக்கும் சம்பந்தம் உள்ளதாகவும் சிட்டிமல்லு கூறுவதுடன், இது தொடர்பாகவும் புகார் தந்திருக்கிறார். அன்று சொத்து கேட்டும் சவுந்தர்யா தரவில்லை, அந்த சொத்து இப்போது மோகன்பாபு கையில் உள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 100 கோடி என்கிறார்கள்.. எனவே, இதை தீர விசாரிக்க வேண்டும்.. உண்மை வெளிவரவேண்டும்.
எத்தனையோ கோடிகள் தங்களுக்கு இருந்தாலும், ஒருசில சொத்து மீது விருப்பம் சிலருக்கு இருக்கும்.. இயல்பாகவே மனிதருக்கு உள்ள பலவீனம்தான் இது.. பெரிய பெரிய இடத்திலிருப்பவர்களும், சின்ன சின்ன வீக்னஸ்களில் சிக்கிவிடுவார்கள்.. அதுபோல, 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டிருக்கலாம்.
நிலத்தை கேட்டது உண்மையா?
சவுந்தர்யா நிலத்தை மோகன்பாபு கேட்டது உண்மைதானா? நிலத்தை தரமுடியாது என்று சவுந்தர்யா சொன்னது உண்மைதானா? அப்படியானால் இப்போது அந்த சொத்து மோகன் பாபு கையில் எப்படி சென்றது? அந்த இடத்தில் கெஸ்ட் அவுஸ் கட்டி மோகன் பாபு எப்படி குடியிருக்கிறார்? இவைகளை எல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று சிட்டிமல்லு புகாரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இவ்வளவு பெரிய ஆளுமையான மோகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்படுமா? புகாரில் தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது போகப்போகதான் தெரியும்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications