பிரபல வில்லன் நடிகரின் மகள்.. சிறு வயதில் கணவர் இறப்பு.. பிறகு பட்ட வேதனை..நடிகை சுமதி ஸ்ரீ எமோஷனல்
சென்னை: சினிமாவிலும் சீரியலிலும் அம்மா கேரக்டரில் நடித்து பலருடைய அனுதாபங்களை பெற்றுக் கொண்டிருக்கும் நடிகை சுமதி ஸ்ரீ தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
13 வயதிலேயே நடிக்க வந்த சுமதி ஸ்ரீ 3 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய கணவர் மரணத்திற்கு பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் அதில் பேசி இருக்கிறார்.

அதோடு தான் பிரபல வில்லன் நடிகரின் மகள் என்பது பற்றியும் பல தகவல்களை அந்த பேட்டியில் சுமதி ஸ்ரீ பகிர்ந்து இருக்கும் நிலையில் இவருக்குள் இத்தனை சோகங்களா? என்று ரசிகர்களை பீல் பண்ண வைத்திருக்கிறார்கள். அதை பற்றி பார்க்கலாம்.
சினிமா நடிகர்களின் வாரிசு என்று தெரியாமலேயே சினிமாவில் அடி எடுத்து வைத்தவர்களில் ஒருவர்தான் நடிகை சுமதி ஸ்ரீ. இவர் தன்னுடைய 13 வயசிலேயே சினிமாவிற்குள் வந்து விட்டாராம். இவருடைய அப்பா, அம்மா, பெரியப்பா எல்லாருமே சினிமா அனுபவம் உள்ளவர்கள் தானாம். அந்த காலகட்டத்தில் இவருடைய பெரியப்பா எம்ஜிஆர் திரைப்படங்களில் கணக்குப்பிள்ளை போன்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அவர் மூலம்தான் சுமதி ஸ்ரீயின் அப்பாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் சினிமாவில் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்த சுமதி ஸ்ரீயின் அப்பாவிற்கு ஆறு மாதங்களுக்கு பிறகு நடிகர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம். அந்த திரைப்படத்தில் சின்ன சின்ன வில்லன்களுக்கெல்லாம் தலைவராக இவருடைய அப்பா தான் நடித்து இருப்பாராம். அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி நூறாவது நாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது.
அப்போது அந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்குமே கேடயம் நடிகர் எம்ஜிஆரின் கையால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அப்போது அங்கு தங்கராஜ் என்கிற பெயரில் பல தங்கராஜ் இருந்திருக்கிறார்கள். அதில் சுமதி ஸ்ரீயின் அப்பாவின் பெயரும் தங்கராஜ். அதனால் எம்ஜிஆர் நீங்கள் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏவாக தானே நடிச்சீங்க, அதனால நீங்க எம்எல்ஏ தங்கராஜ் என்று சொல்ல அவருடைய பெயர் அந்த கேடயத்தில் எம்எல்ஏ தங்கராஜ் என்று எழுதப்பட்டதாம். அது போலவே கடைசி வரைக்கும் அவருடைய பெயர் எம் எல் ஏ தங்கராஜ் என்று விளங்கி விட்டதாம்.
அந்த வகையில் வீட்டில் எல்லாரும் சினிமா நடிகர்களாக இருக்கும் நிலையில் இவருக்கும் 13 வயதில் இருக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. அப்போது வாய்ப்புக்காக தன்னுடைய தந்தை உடன் ஒரு சில இடங்களுக்கு சென்றிருக்கிறார். பிறகு இவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகங்களிலும் சுமதி ஸ்ரீ நடித்துக் கொண்டிருந்தாராம். அப்படி நாடகம் நடிக்கப் போன இடத்தில்தான் இவருக்கு இவருடைய கணவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறார்கள். ஆனால் இருவரும் பெரிய அளவில் அந்த காதலை வெளியே சொல்லாமலே மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சுமதி ஸ்ரீயின் வீட்டில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவிக்க அதற்கு அவருடைய கணவரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லையாம்.
ஆனாலும் இவர்களின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சுமதி ஸ்ரீ நடிக்க கூடாது என்று அவருடைய கணவரின் குடும்பத்தினரும் கணவரும் சொல்லியதால் இவர் நடிப்பை விட்டு விலகி இருந்தாராம். அதற்குப் பிறகு அதிகமாக பண கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் திடீரென்று மாரடைப்பு காரணமாக அவருடைய கணவர் இறந்து போன பிறகு தன்னுடைய ஒரே மகளை வளர்ப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன் என்று அந்த பேட்டியில் கண்கலங்க சுமதி ஸ்ரீ பேசி இருக்கிறார்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications