வாவ்.. ஆலியாவை விட அவரோட பாப்பா செம க்யூட்.. வேற லெவல் எக்ஸ்பிரஷன்!
சென்னை: ஆலியா மானசாவை விடவும் அவரது குழந்தை செம எக்ஸ்பிரஷன் காட்டிக்கொண்டு இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
குழந்தைகள் என்றாலே அழகு தான். அதுவும் தனது பொக்கை வாய் தெரிய சிரிக்கும் அழகிற்கு ஈடு எதுவும் இல்லை. அதுபோலத்தான் தற்போது நட்சத்திர தம்பதிகளான ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதிகளின் குழந்தையின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் ஆலியா மானசா, சஞ்சீவ் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இன்னும் காதலர்கள் போலத்தான் வலம் வந்து கொண்டுள்ளனர்.
ஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. "கீப் வாட்சிங்"!
காதலின் சின்னம்
இவர்களின் பெரும் காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு தற்போது இருவரும் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தருணங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். பலர் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறோம் வேலையில் பிஸியாக இருக்கிறோம் என்று வீட்டில் இருப்பவர்களை கவனிப்பதே இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
பாப்பாதான் உலகமே
ஆனால், நாங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் எங்களுக்கு குடும்பமும் ரொம்பவே முக்கியம். வெளியில் இருக்கும் வேலையை வீட்டிற்கு வெளியே விட்டு விட்டு வீட்டிற்குள் வந்து விட்டால் வீடு சிறப்பாக இருக்கும் நமது குடும்பமும் சந்தோசமாக இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில் இவர்கள் இருவரும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்கள். சினிமாவில் கூட நடிப்பவர்கள் எல்லாம் காதலிப்பது என்பது புதிதான ஒன்று அல்ல இருந்தாலும் திருமணம் வரை சென்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சிலர்தான்.
காதல் குறையாது
ஆனால் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் காதல் குறையாமல் எப்பவும் நம்மவர்களுக்கு நம்முடைய நேரத்தை கொஞ்சம் செலவழித்தால் போதும் என்பதுதான் காதலர்களுக்கும், காதலித்து மணந்தோருக்கும் ஆலியா சஞ்சீவ் தரும் சின்ன அட்வைஸ். அதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில் தற்போது கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள் ஆலிய தம்பதி. குழந்தை பிறப்பது என்பது எல்லோருக்கும் சாதாரணம் தான். ஆனால் அது எங்களுக்கு பொக்கிஷம் என்னுடைய குழந்தை தான் எங்களுக்கு வாழ்க்கையின் அடையாளம் என்று கொண்டாடி வருகிறார் ஆலியா.
அம்மா மாதிரியே பொண்ணு
அவளுடைய சிரிப்புக்காக நாங்கள் என்ன வேணாலும் செய்வோம் என்று அழகான குழந்தை பிறந்ததன் ஆறுமாதத்தை கொண்டாடி இருக்கிறார்கள். இதில் விதவிதமான போட்டோக்களாக எடுத்து அவரவர்களின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதவிட்டுள்ளனர். இதை பார்த்த பல ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள் . சில ரசிகர்கள் இந்த மாதிரி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள். குழந்தைக்கு கண் பட்டுவிடும் என்று கூறி வருகிறார்கள் .
குழந்தை மீது ரொம்ப பாசம்
அதுவும் குழந்தையின் மீது இருக்கும் பாசத்தில் தான் என்றும் ஆல்யாவும் கூறிவருகிறார். இதில் அம்மாவும் பொண்ணும் ஒரே கலரில் டிரஸ் போட்டு தேவதை போல இருக்கிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சஞ்சீவும் சேர்ந்து கமெண்ட் மழை பொழிந்துக் கொண்டிருக்கிறார். தற்போது சீரியல்களில் ஆல்யா மானசா பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், மாதத்தில் 15 நாட்கள் சூட்டிங்கில் நடித்துக் கொண்டு இருந்தாலும் தனது மகளுக்கும் உரிய நேரத்தை கொடுக்க ஆலியா தவறுவதில்லையாம். சூப்பர் அம்மாதான்.