Ayudha Ezhuthu Serial: மாவட்ட ஆட்சியர் ரோகினி + சிவகாசி = ஆயுத எழுத்து கதை!
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் மக்களுக்கு சில பிரச்சனைகளை பூத கண்ணாடி வைத்து காண்பிப்பது போல இருக்கு. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியதும்., புரிந்துகொள்ள வேண்டியதும் நிறையத்தான் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, அதிரடி விஷயங்கள் செய்து ,மாவட்ட மக்களையே கவர்ந்தார். விவசாயிகள் துதி பாடினார். திடீரென அவரை அவசர இடம் மாறுதல் செய்துவிட்டார்கள்.
அவரின் கதை, பிறகு சிவகாசி குழந்தை தொழிலாளர் கதை இரண்டையும் சேர்த்து இந்த சீரியலில் அத்தியாயத்தை காட்சி படுத்தி இருப்பது போல தோன்றுகிறது..

இருபது வருஷமாவா?
நாகர்கோயில் அருகே இருக்கும் கிராமத்தில் காளி அம்மா என்று ஒரு அம்மா. சொர்ணாக்கா மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அவங்க புண்ணியத்தால் உள்ளூரில் இருக்கும் பள்ளிக்கு இருபது வருஷமா குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லையாம். ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கறாங்க. இது எப்படி இருக்குது பாருங்க.

பள்ளிக்கு பிள்ளைகளை
இப்படி அப்பட்டமாக எந்த ஊரிலாவது இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிக்கப் படாமல் இருக்கிறதா என்ன? அதுவும் பெரிய ஃபேக்டரி எடுத்து நடத்துவது மாதிரி. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்படி இருந்தாலும், அதை சீல் வைக்க சப்கலெக்டர் இந்திராவுக்கு அதிகாரம் அளிக்கவில்லை கலெக்டர் வேறு முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

ஒழிப்பு அமைப்பு
உடனே குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு அமைப்புக்கு போன் செய்து பிரஸையும் அழைச்சுக்கிட்டு வர சொல்றாங்க சப் கலெக்டர் இந்திரா. இப்படி தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாதபடி கைகள் கட்டப்பட்டு இருக்கும்போது சம யோசிதமாக செயல்பட வேண்டும். உண்மையில் அரசாங்கத்தில் நல்ல அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட சமயோசித யுக்திகளை கையாண்டு தாங்கள் நினைத்தை சாதிக்கலாம்.

காளி அம்மாவை
இப்படித்தான் இந்த சீரியலில் வரும் சப்கலெக்டர் இந்திரா, பள்ளிக்கு ஒரு குழந்தைகள்கூட வராமல் தொழிலாளர்களாக இருக்கும் நிலையில், கலெக்டரிடம் ஃபேக்டரிக்கு சீல் வைக்க அனுமதி கேட்டு, அவர் கொடுக்காத பட்சத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்புக்கு போன் செய்து பிரஸையும் அழைச்சுக்கிட்டு வர சொல்றாங்க .இது காளி அம்மாவின் ஃபேக்டரி என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications