அமிர்தாவிடம் எழில் கேட்ட கேள்வி.. கலங்கும் பாக்கியா.. சந்தேகப்படும் ராமமூர்த்தி.. உடைய போகும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் ஆறாம் தேதிக்கான எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கிறது.

அதில் செழியனை பாக்யாவை போலவே ராமமூர்த்தியும் சந்தேகப்படுகிறார்.

அதே நேரத்தில் எழில் அமிர்தாவிடம் குழந்தை விஷயத்தில் தன்னுடைய ஆசையை சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial 6th of October 2023 promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜெனி செழியன் இன்னும் வராததால் பாக்யாவை போன் பண்ண சொல்ல பாக்கியா செழியனுக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் ஹாஸ்பிடல் வந்து விடுகிறார். பிறகு பாக்யா செழியனை தனியாக கூப்பிட்டு போய் நீ செய்றது சரியில்லை நீ பண்றது ஏதோ தப்பா இருக்கு என்று எச்சரிக்கிறார்.

Baakiyalakshmi Serial 6th of October 2023 promo and episode full update

அதற்கு செழியன் வழக்கம் போல ஒன்றுமில்லை. வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது என்று சமாளிக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த பாக்கியா தனக்கு ஒரு விருது வழங்கும் காண்ட்ராக்ட் வர இருக்கிறது அதை எடுக்கப் போகிறேன் என்று கிளம்ப, அப்போது ஈஸ்வரி அங்கு அந்த ராதிகாவுக்கு தெரிஞ்ச யாரும் இருக்க மாட்டாங்களா? என்று கேட்டுக் கொண்டு இந்த கான்ட்ராக்ட் உனக்கு கிடைக்க வேண்டும், நீ இந்த காண்ட்ராக்டை வாங்கி ராதிகா முகத்துல கரிய பூசணும் என்று வாழ்த்தி அனுப்புகிறார்.

அதைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது பாக்கியா ஜெனியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துவிடலாம் என்று பேசிக்கொண்டு இருக்க, அதற்கு ஈஸ்வரி வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் அவங்க அம்மா கூட இருக்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு ராமமூர்த்தி என்ன ஆச்சு எதனால நீ இந்த முடிவு எடுத்திருக்க என்று பாக்கியாவிடம் விசாரிக்க பாக்கியா செழியன் நடவடிக்கை சரியில்லை என்று சொல்ல அதற்கு அவரும் நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் எனக்கும் சரியா படல என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து எழில் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அமிர்தாவும் வர இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு நாம ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என எழில் ஆசையாக கேட்க அதற்கு அமிர்தாவும் சம்மதம் சொல்ல இருவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து பாக்யா காண்ட்ராக்ட் எடுப்பதற்காக ஒரு கம்பெனிக்கு வர கோபி அங்கு எதார்த்தமாக வர அது அவருடைய ஃப்ரெண்ட் வினோத்தின் மாமனார் கம்பெனி என்பதால் பாக்யாவிற்கு காண்ட்ராக்ட் கொடுக்கக் கூடாது என்று கோபி கூறுகிறார். அதற்கு வினோத்தும் சரி என்று சொல்லி விடுகிறார். பிறகு மாமனார் பாக்கியாவிற்க்கு காண்ட்ராக்ட் கொடுக்க போகும் சமயத்தில் வந்து அதை தடுத்து நிறுத்தி விடுகிறார்.

அது தொடர்ந்து பாக்யாவும், செல்வியும் கவலையோடு வெளியே வர அங்கு வரும் கோபி இந்த சிட்டிக்குள்ள நீ புதுசா எங்கேயும் காண்ட்ராக்ட் எடுக்கவே முடியாது. எடுக்கவும் விடமாட்டேன் என்று வில்லனாக பேசுகிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+