பாக்கியலட்சுமி: பூமர் மாமியாரை கதறவிட்ட ராதிகா.. அடங்காத கோபிக்கு அப்பாவே வைத்த ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா தோற்றுப் போய்விடுவார் என்று கோபியும் அவருடைய அம்மாவும் நக்கல் செய்து கொண்டிருக்க அதனால் கோபமான ராதிகா வெகுண்டெழுந்து கேள்வி கேட்கிறார்.
அம்மா அப்பா முன்னாடியே கோபியை கேள்விகளால் கிழித்த ராதிகாவை ராமமூர்த்தி பாராட்டுகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் பொருட்காட்சி காண்ராக்ட் எடுத்திருக்கும் நிலையில் மழையின் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இனி திரும்ப அந்த பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பெரும் கேள்வி இருக்கிறது. அதோடு கவர்மெண்ட் திருப்பி கொடுக்கும் ஒரு லட்சம் ரூபாயையும் காண்ட்ராக்ட் எடுத்தவர் நான் திருப்பி தர மாட்டேன்.
அது எனக்கு கவர்மெண்டில் இருந்து தருவது நான் உங்களிடம் காண்ட்ராக்ட் தந்து விட்டேன். அதில் லாபமோ நஷ்டமோ நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி இருக்கிறார். அதே நேரத்தில் கணேஷ் பாக்யாவிடம் இன்னும் தன்னுடைய விஷயத்தை பற்றி இன்னும் 12 நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நானே அமிர்தாவிடம் பேசிக்கொள்வேன்.
பிறகு நான் எடுக்கிறது தான் முடிவாக இருக்கும் என்று மிரட்டிக்கொண்டு போயிருக்கிறார். இதனால் பாக்கியா இனி என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி வீட்டில் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரியோடு சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கோபி ஈஸ்வரியிடம் இப்ப பாரு பாக்கியா வீட்டிற்கு வருவா, அத்தை நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு நான் தோத்து போயிட்டேன் நீங்க சொன்ன பேச்சைக் கேட்காமல் நான் பணத்தை கொடுத்தது தான் தப்பு என்று தலையை தொங்க போட்டுட்டு வருவா என்று சொல்லி நக்கலாக சிரித்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் கிச்சனில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்த ராதிகா கோபப்பட்டு கோபியிடம் சண்டை இடுகிறார்.
நீங்கள் தான் பாக்கியாவிற்க்கு எந்த உதவியும் செய்யவில்லையே பிறகு அவர் கஷ்டப்பட்டால் அதை சொல்லி சிரிக்கிறதுக்கு என்ன இருக்கிறது? கொஞ்சமாவது அறிவு இருக்கா என்று கோபியை கோபமாக திட்ட, அதனால் ஈஸ்வரி ஒரு புருஷனை இப்படியா பேசுவா என்று கேள்வி கேட்கிறார்.
அப்போது ராமமூர்த்தி கொஞ்சம் நின்னுமா என்று சொல்லி, நீ இவ்வளவு அறிவா பேசுற எப்படி இந்த கோபியை போய் கல்யாணம் பண்ணுன என்று கேட்க கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். ஏற்கனவே இதே போலவே அரைச்ச மாவையே இந்த சீரியலில் இது கதை இல்லாமல் அரைத்துக் கொண்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் சலிப்பு தட்டி இருப்பதாக கமெண்ட்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications