தந்தை இறந்த பிறகு பிக்பாஸ் பாலா போட்ட முதல் போஸ்ட்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பாலா அந்த நிகழ்ச்சியை முடித்ததும் பெரும் துயரத்தில் இருந்தார்.
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்டரை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் களையும் தன்னம்பிக்கையும் கொடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாருக்கெல்லாம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ பாலாவிற்கு நல்லதே மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

அதிகரிக்கும் ரசிகைகள்
அது மட்டுமல்லாமல் பெண் ரசிகைகளும் அதிகமாக அதிகரித்து விட்டனர். இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் இவர் வசியம் பண்ண தொடங்கிவிட்டார் . குழந்தைகளும் இவரை தங்களுடைய ரோல்மாடலாக எடுத்துக் கொண்டுவிட்டது. அதனால்தான் சில குழந்தைகள் கூட இவர் வின்னர் ஆகவில்லை என்று பீல் பண்ணி இவருக்காக பல வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தது .

அதிகரிக்கும் ரசிகைகள்
அது மட்டுமல்லாமல் பெண் ரசிகைகளும் அதிகமாக அதிகரித்து விட்டனர். இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் இவர் வசியம் பண்ண தொடங்கிவிட்டார் . குழந்தைகளும் இவரை தங்களுடைய ரோல்மாடலாக எடுத்துக் கொண்டுவிட்டது. அதனால்தான் சில குழந்தைகள் கூட இவர் வின்னர் ஆகவில்லை என்று பீல் பண்ணி இவருக்காக பல வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தது .

அப்பாவின் மரணம்
இந்த வீடியோக்களை பார்த்ததும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போன பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதில் கலந்து கொள்வதற்கு முன்னரே அவருடைய அம்மா இறந்து விட்டார். தற்போது அவரது தந்தையும் இறந்துவிட்டார். இந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை கூறியிருப்பார்.

ரசிகர்கள் ஆறுதல்
அதுமட்டுமல்ல பெற்றோரை பற்றியும் கூறியிருந்தார். தற்போது தந்தை இறந்த துக்கத்தில் இருந்த அவருக்கு அவருடைய ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். அவருடைய தந்தை இறந்த செய்தியை அவருடைய அண்ணன் தான் முதலில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் .பின்பு பாலாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கன்ஃபார்ம் பண்ணி இருந்தார் .

கதறல்
தந்தையின் இறப்பில் இவர் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது .தந்தையின் இறப்பிற்குப் பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்களும் சக பிக்பாஸ் போட்டியாளர்களும் அவருக்கு ஆறுதலை அளித்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

கொண்டாட்டம்
பிக் பாஸ் இன் வெற்றி கொண்டாட்டத்தை விஜய் டிவி தற்போது கொண்டாடி வருகிறது. அந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படும் நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது .அந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு எனக்கு கொடுக்கும் நெகட்டிவ் கமெண்டுகளாக இருந்தாலும் சரி பாசிட்டிவ் எனர்ஜி ஆக இருந்தாலும் சரி அதனை கொடுப்பவர்களுக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுவேன்.

என்ன நடந்தாலும் கவலை இல்லை
என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று அவர் போட்ட போஸ்ட் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்த வீட்டிற்குள் பாலா இப்படித்தான் இருந்தார் .வாரம் முழுக்க என்ன நடந்தாலும் கவலை இல்லை என்று சண்டை போட்டுக் கொண்டு முறுக்கிக்கொண்டு இருக்கும் இவர் வெள்ளிக்கிழமை ஆனால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க ஆரம்பித்து விடுவார்.

போஸ்ட்
நான் செய்தது தவறு என்று நான் தெரிந்து விட்டேன் புரிந்து விட்டேன் என்று கூறி அனைவரிடமும் சமாதானமும் ஆவார். ஆனால் அடுத்த வாரம் மீண்டும் அதே பல்லவியை தொடங்கி விடுவார். இதுதான் இவரது வாடிக்கை அந்த மாதிரி தற்போது இவருடைய தந்தையின் இறப்பில் கதறி அழுத இவர் அடுத்த நாளே இந்த மாதிரி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications