"பிக்பாஸ்" என் சுயநலமல்ல, பொதுநலம்.. மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன்- கமல்
மக்கள் எல்லோரிடமும் பேசவும், தொடர்பு கொள்ளவும் பிக்பாஸ் 2 தளத்தை பயன்படுத்திக் கொள்வேன் என்று கமல்ஹாசன், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசியுள்ளார்.
சென்னை: மக்கள் எல்லோரிடமும் பேசவும், தொடர்பு கொள்ளவும் பிக்பாஸ் 2 தளத்தை பயன்படுத்திக் கொள்வேன் என்று கமல்ஹாசன், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசியுள்ளார்.
மக்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஆரவார பிக்பாஸ் போட்டியின் அடுத்த சீசன் தொடங்கிவிட்டது. பிக்பாஸ் சீசன் 2, இன்னும் 100 நாட்களுக்கு இணையம் தொடங்கிய, தெரு முனையில் இருக்கும் பாட்டிகளின் இணையம் வரை, எல்லோரும் இதை பற்றித்தான் பேச போகிறார்கள்.

இப்படி எல்லோரும் பேச போகும் பிக்பாஸ் பற்றி, கமல்ஹாசன் பேசினார். தொடர்ந்து இரண்டாவது வருடமாக பிக்பாஸை தொகுத்து வழங்குகிறார். அதில் அவர் கூறிய சில குறுப்படம் முத்துக்கள் மக்களை கவர்ந்தது.
அதில், அரசியலுக்கு வந்த பின்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முக்கிய காரணம் இருக்கிறது. இந்த நிகழ்வு மூலம் மக்களுடன் அதிக தொடர்பில் இருக்க முடியும். இந்த பிக்பாஸ் மூலம் தினமும் நான் மக்களுடன் பேச முடியும். இதனால் அதிக மக்களிடம் பேச முடிகிறது.
இந்த பிக்பாஸ் என்பது என்னுடைய, சுயநலம் கிடையாது. என்னுடைய சுயநலத்திற்காக நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. மக்களின் நலனுக்காக, இந்த நிகழ்ச்சியில் எதாவது பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பெரிய தளத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.
விக்ரம், தேவர் மகன், தசாவதாரம் என பல படங்களில் என்னுடைய நடிப்பு கவர்ந்து இருக்கிறது. ஆனால் இதில் நான் உண்மையாக பேசுவது மக்களை சென்று சேர்ந்துள்ளது. உண்மையான கமல்ஹாசனாக மக்களுக்கு நான் சென்று சேர்த்துள்ளேன்.
படங்களை விட நான் பேசுவதை இங்கு மக்கள் அதிகம் கேட்கிறார்கள். நான் மக்களிடம் கருத்துக்களை நேரடியாக பேசுகிறேன். யாருடையா வசனத்தையும் நான் பேசுவது இல்லை. இந்த பிக்பாஸ் மூலம் யார் நல்லவர் கெட்டவர் என்று தெரிய வரும். இந்த பிக்பாஸ் 2 கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும். மக்கள் அதற்கு சாட்சியாக இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications