பிக் பாஸ் 2 : காரசார சண்டை ஒருபுறம்... சைடு கேப்பில் மஹத் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்!
மஹத் - யாஷிகாவின் நடவடிக்கைகள் சகபோட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Recommended Video

சென்னை : பாத்திரம் கழுவுவது தொடர்பாக சக போட்டியாளர்கள் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, மஹத் ஒருபுறம் யாஷிகாவைக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தது பார்வையாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தண்ணில கண்டம் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சரிவர தூக்கம் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் சோர்வாக காணப்படுகின்றனர்.

இதற்கிடையில், பாத்திரம் கழுவுவது தொடர்பாக மும்தாஜுக்கும், டேனிக்கும் இடையில் வாக்குவாதம் உண்டானது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர். அதனை சக போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்த சண்டையை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், யாஷிகாவைக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் மஹத். இதைப் பார்த்து நித்யா உள்ளிட்டோர் தலையில் அடித்துக் கொண்டனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் கடமையை கண்ணாகச் செய்து கொண்டிருந்தார் மஹத். இந்தக் காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது பார்வையாளர்களை எரிச்சல் படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications