பிக் பாஸ் தாமரை செல்வி வீட்டில் திடீர் மரணம்..கண்ணீரோடு வெளியிட்ட பதிவு..வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் தாமரை செல்வி பிரபலம் அடைந்திருந்தார்.
அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய அப்பாவின் மறைவு பற்றி புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
அது குறித்து ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் தாமரை செல்வி. இவர் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதற்கு முன்புவரைக்கும் இவர் ஒரு மேடை கலைஞராக கோவில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுபவராகத்தான் இருந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தாமரை செல்வியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது தாமரை செல்வி ஆசைப்பட்ட மாதிரி அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும், சின்னத்திரை வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றது. விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பாரதிகண்ணம்மா முதல் சீசனில் கண்ணம்மாவின் தோழியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் எனும் சீரியலிலும் தாமரை செல்வி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய அட்ராசிட்டி நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக இவர் இருக்கும்போது அடிமட்டத்து வாழ்க்கையில் இருந்த தாமரை செல்வி பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.

பிக் பாஸ்நிகழ்ச்சியில் தன்னுடைய சோக கதையை கூறி பலருடைய அனுதாபத்தை பெற்று விட்ட தாமரை செல்வி அதை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது அவருடைய அப்பா இறந்து போயிருக்கிறார்.

அதைப்பற்றி தன்னுடைய அப்பாவின் மறைவை குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து தாமரை செல்விக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications