"டாக்டர்" அட்லீயை விலை மாதுவுடன் ஒப்பிட்ட இயக்குநர்! காப்பி அடிப்பதாகவும் விமர்சனம்!
சென்னை: அட்லியை காப்பி அடிச்சு படம் எடுக்கிறார்னு சொன்னாலும் அவர் படங்கள் பயங்கர பிஸினஸ் பண்ணுது என்பதை விலைமாதுவுடன் ஒப்பிட்டு இயக்குநர் ஆர்.எஸ்.கார்த்திக் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில்தான் அட்லீக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.
பொதுவாக விஜய்- அட்லீ காம்பினேஷன் வெற்றிக் கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஷாரூக்கானை வைத்து இயக்கிய அட்லீ, தற்போது சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார்.

அது போல் அல்லு அர்ஜுன் என லிஸ்ட் பெரிசாகிக் கொண்டே போகிறது. அவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம், உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். தற்போது ஷங்கரை விட அதிக பணத்தை ஊதியமாக பெறுகிறார் அட்லீ. இது போல் தனது முன்னேற்றத்திற்கு காரணம் விஜய் அண்ணன்தான் என அடிக்கடி அட்லீ கூறி வருகிறார்.
சத்யபாமா பல்கலைக்கழகம், அட்லீயை பெருமைப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டத்தை வழங்கியது. அந்த மேடையிலும் அவர் விஜய் குறித்து பேசியிருந்தார். இதன் பின்னணியில் பெரிய அரசியல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜேப்பியாரின் மகள் நடத்தும் கல்வி குழுமம்தான் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. அதே மேடையில் விஜய் என்னோட அண்ணன், "பிகில்" படத்தில் ராயப்பன் கேரக்டர் ஜேப்பியாரை வைத்து உருவாக்கியது என அட்லீ, விஜய்யை பெருமைப்படுத்தி பேசினார்.
ஜேப்பியார் மருமகனுக்கு விஜய் தன் கட்சியில் பதவி கொடுத்திருக்கிறார். இதனால் அட்லீக்கும் விஜய் கட்சியில் ஒரு பொறுப்பு வழங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அட்லீ, காப்பியடித்துதானே படம் எடுக்கிறார். அவருக்கு ஏன் டாக்டர் பட்டம் என ஒரு சாரார் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு மற்ற தரப்போ, அட்லீ காப்பி அடித்து படம் எடுத்தாலும் படம் பிஸினஸ்ஸை பெற்றுத் தருகிறதே, வேறு என்ன வேண்டும் என்கிறார்கள். இந்த கருத்துக்கு இயக்குநர் ஆர்.எஸ்.கார்த்திக் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் அட்லீய காப்பி அடிச்சு எடுக்கிறார்னு சொன்னாலும் அவர் படங்கள் பயங்கர பிஸ்னஸ் பண்ணுதுன்னு சொல்றீங்க.
வீட்டு வேலை செய்து 100 ரூபாய் சம்பாதிக்குறாங்க. இன்னொருத்தர் விலை மாதராய் போய் ரூ 5000 சம்பாதிக்கிறாங்க. இவர்களில் யார் சூப்பர்? காசு முக்கியம் இல்லை என இயக்குநர் கார்த்திக் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ். கார்த்திக் என்பவர் "அச்சம் என்பது மடமையடா", "மாநகரம்", "பீச்சாங்கை", "என்னங்க சார் உங்கள் சட்டம்", "பரோல்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கவுதம் வாசு தேவனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications