இறந்தும் வாழும் மாரிமுத்து.. இரண்டு ஆதி குணசேகரனும் ஒரே இடத்தில்.. கண்ணீரில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவருடைய இறப்பிற்கு பிறகு அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் கடைசியாக ஒன்றாக நடித்த திரைப்படத்தின் போஸ்டரை வேலராமமூர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து குறித்து அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களையும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் சமீப காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியலாக தான் இருக்க முடியும். இந்த சீரியலின் கதை குறித்தும் இதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு திறமை குறித்தும் அரசியல் பிரமுகர்களும், சாதாரண மக்களும் பேசி கொண்டிருக்கின்றனர். இளம் தலைமுறையினர்களையும் இந்த சீரியல் சின்னத்திரையை நோக்கி வர வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு இந்த சீரியல் வெற்றி அடைவதற்கு காரணமாக சீரியல் இயக்குனரும், கதை ஆசிரியரும் இருந்தாலும் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் வாழ்ந்து வந்த நடிகர் மாரிமுத்துவும் முக்கிய காரணம். ஆனால் விதி அவரை திடீரென்று இந்த உலகத்தை விட்டு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் அவருடைய மறைவு குறித்து அவருடைய நண்பர்கள் மட்டுமல்லாமல் சீரியல் ரசிகர்களும் தங்களுடைய வருத்தங்களை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த திரைப்படத்தின் போஸ்டரை தற்போது குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தி தன்னோட சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.அந்த வகையில் அந்த திரைப்படத்தில் நடிகர் மாரிமுத்துவும் வேலராமு மூர்த்தியும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார்கள்.
அந்த திரைப்படத்திற்கு வீராயி மக்கள் என்ற தலைப்பு வைத்திருக்கின்றனர். இது கிராமத்து பங்காளிகளின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாம். அது போல நடிகர் மாரிமுத்து கடைசியாக தன்னோடு நடிக்கும் போது எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய பலவற்றையும் ஏற்கனவே வேல ராமமூர்த்தி பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவை அதிகமாக மிஸ் பண்ணுவதாக அவருடைய ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அவர் கடைசியாக நடித்த "வீராயிமக்கள்" என்ற திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறதாம். அந்த திரைப்படத்தை நாகராஜ் கருப்பையா தான் எழுதி இயக்கியும் இருக்கிறாராம். ஆனாலும் ரசிகர்கள் மாரிமுத்துவின் நடிப்பை மீண்டும் பார்ப்பதற்காக கண்ணீரோடு காத்திருப்பதாக கருத்து தெரிவித்து விடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications