Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டி வண்டியாய் பீலிங்கு.. ஓரளவு டீசன்ட் வரிதான், அந்த குரலை கேட்டதுமே பக்குனு ஆயிருச்சு: ராஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டுப்புற பாடல்களை நம்முடைய விருப்பம்போல பாடலாம். ஆனால் சினிமா பாடல்கள் அப்படி இல்லை. இப்படித்தான் பாட வேண்டும், இப்படித்தான் வரிகளை முடிக்க வேண்டும் என்று நோட்டு இருக்கும். இதைத்தான் இசையமைப்பாளர்களும் விரும்புவார்கள்" என்று கூறியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில்.

பெரிய மியூசிக் டைரக்டரிடம் பாடுவது பெருமைக்குரிய விஷயம்... 4 பாட்டு பாடினாலும், பணம் வாங்காமல் ஒரு பாட்டு பாடுவதால் ஒன்றும் தவறில்லை. இதற்கு காரணம், அந்த இசையமைப்பாளரிடம், பாட்டு பற்றின பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். தெரியாதவற்றை கற்றுக் கொள்ள முடியும். இதனால் சில நன்மைகளும் நடக்கும். மற்றபடி, நான் பாடிய பாட்டுக்கு ஏன் பணம் தரல? நான் பாடியது ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்றெல்லாம் கேட்க மாட்டேன்.

rajalakshmi pushpa 2 2

ரிக்கார்டிங்: அதேசமயம், நான் ரிக்கார்டிங்கில் பாடிய பாட்டு வரலேன்னா, அது உண்மையிலேயே மனசுக்கு கஷ்டமாக இருக்கும். ஒருமுறை நான் இப்படித்தான் ரிக்கார்டிங்கில் ஒரு பாட்டு பாடிட்டு வந்தேன்.

அதற்கு பிறகு அந்த பாட்டின் டியூனே மறந்துவிட்டது. பிறகு மறுபடியும் படம் ரிலீஸானபோது, அந்த பாட்டை கேட்க முடிந்தது. இந்த பாட்டை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? என்று யோசித்தபோதுதான், ரிக்கார்டிங்கில் பாடியது நினைவுக்கு வந்தது. உடனே அதை ஆர்வத்துடன் கேட்டபோது, அதே பாட்டை வேறு ஒரு பாடகி பாடியிருந்தாங்க.. என் குரலுக்கு பதிலாக வேறு குரலை கேட்டதுமே எனக்கு பக்குனு ஆயிருச்சு.

விருமன் பாடல்: ஆனால், நான் பாடியது எல்லாம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றோ, அதை ஒரு பிரச்சனையாக்க வேண்டும் என்றோ நான் எப்போதுமே நினைத்தது கிடையாது. "விருமன்" படத்திலும், நான் பாடிய பாட்டை அதிதி பாடியிருந்தாங்க.. ஆனால், நல்லாவே பாடியிருந்தாங்க என்றுதான் நான் சொன்னேன். "சாமி சாமி" பாட்டுக்கும், என்னுடைய வாய்ஸை, முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் சொன்னார்கள். அந்த பாடல் என் குரலுக்கு பொருத்தமாக இருந்தது என்றதும்தான் ரிலீஸ் செய்தார்கள்.

பீலிங்ஸ் பாடல் வரிகளை பொருத்தவரை, ஒருமாதிரியான வரிகளை கொண்ட பாடலா? என்று கேட்டால் உண்மைதான்.. ஆனால், அனைவருக்குமே ஒவ்வொரு உணர்வுகள் இருப்பதுபோல அதுவும் ஒருவகையான உணர்வுதான். ஆனால் அதை சொல்வதெற்கென்று ஒரு முறை இருக்கு.. அந்தவகையில், ஃபீலிங்க்ஸ் பாடல் வரிகளையும் ஓரளவுக்கு டீசன்ட்டாதான் ஹேண்டில் செய்திருந்தார்கள்.. ஐட்டம் சாங்காக இருந்தாலும் பிரச்சனையில்லை.. ஆனால், அதில் ஒரு நேர்த்தி இருக்கணும்.

மதன் கார்க்கி: கன்னட படம் ஒன்று தமிழில் எடுக்கப்பட்டபோது, மதன் கார்க்கிதான் வரிகளை எழுதியிருந்தார். ஆனால், அது ஐட்டம் பாடலா? என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு டீசன்ட்டா எழுதியிருந்தார். சில பாடல்கள் முகம் சுழிப்பதுபோல இருக்கும்.. அப்படி வரிகள் இருந்தால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்பதால், அந்த வரிகளை மட்டும் மாற்றி எழுதித்தரும்படி கேட்டுப்போம்.

சிலசமயம் மெலடி பாடல்களை எனக்கு பாட தருவார்கள். ஆனால், அது என்னுடைய குரலுக்கு செட் ஆகாது, வேற யாருக்காவது தந்துவிடுங்கள் என்று நானே சொல்லிவிடுவேன். அதேபோல, பாடல்களை பாடுவதிலும் நிறைய சென்டிமென்ட் பார்ப்போம் என்பதால், நெகட்டிவ் பாடல்கள் என்றால் தவிர்த்துவிடுவோம்.

நாட்டுப்புற பாடல்கள்: நாட்டுப்புற பாடல்களை பாடுவதற்கும், சினிமா பாடல்களை பாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு நாட்டுப்புற பாடகர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. அதனால் நாட்டுப்புற பாடல்களை, அவரவர் ஸ்டைலில் பாடி கொள்ளலாம். அது நம்முடைய கற்பனையை பொறுத்தது.. ஆனால் சுருதியில் அந்த பாடல் இருக்கிறதா? என்று மட்டுமே பார்க்க வேண்டும்.

மற்றபடி எப்படி வேண்டுமானாலும் உயிர் கொடுத்து, நம் விருப்பம்போல பாடலாம். ஆனால் சினிமா பாடல்கள் அப்படி இல்லை. இப்படித்தான் பாட வேண்டும், இப்படித்தான் வரிகளை முடிக்க வேண்டும் என்று நோட்டு இருக்கும். இதைத்தான் இசையமைப்பாளர்களும் விரும்புவார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் ராஜலட்சுமி செந்தில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+