Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை சுகன்யா.. அந்த அரசியல்வாதியா? சர்ச்சைகளை உடைத்து, நடிப்பில் உச்சம் தொட்டு: யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை சுகன்யாவுக்கும், சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார். இந்த சர்ச்சைகளை முறியடித்து, சின்னத்திரையில் வெற்றிநடை போட்டவர் சுகன்யா என்றும் பாராட்டு தெரிவித்திருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

Behindcinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் நடிகை சுகன்யா திரையுலகிற்குள் எப்படி நுழைந்தார்? சர்ச்சைகளில் எப்படி சிக்கினார்? என்பது குறித்து விலாவரியாக பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

television sukanya politician

"இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா.. தாய்மாமன் வக்கீல்.. இவரது அப்பா திரைப்பட தயாரிப்பாளர். அதனால் திரைப்பட ஆர்வம் சுகன்யாவுக்கு இயல்பாகவே இருந்தது.. தன்னுடைய பள்ளிப்படிப்பு காலத்திலேயே நடனம், நாட்டியம், இசை, இசைக்கருவிகளை கற்றத்தந்தவர்.. கலாசேத்ரா மாணவியாகவும் திகழ்ந்தவர்..

நடிகை சுகன்யா: ஆனால் சினிமாவில் நடிக்க ஆர்வமில்லாமல் இருந்தார்.. கங்கை அமரன் சுகன்யாவை நேரில் பார்த்துவிட்டு, நடிக்க அழைத்தும் அதற்கு மறுக்கிறார் சுகன்யா. ஒரு தயாரிப்பாளரும நடிக்க அழைக்கிறார். அப்போதும் சுகன்யா நடிக்க மறுத்து விடுகிறார். அவரது பெற்றோர்களும் சுகன்யாவை நடிக்க வைக்க விரும்பவில்லை.

கண்ணதாசனின் மகன் தயாரிப்பாளர் என்பதால், ஒருமுறை சுகன்யாவின் பள்ளிக்கூடத்துக்கே கிளம்பி செல்கிறார்.. தில்லானா மோகனாம்பாள் படத்தை ரீமேக் செய்ய போவதாகவும், பத்மினி கதாபாத்திரத்தில் சுகன்யாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்யுமாறு, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்கிறார். அதற்கு பிறகுதான் தலைமை ஆசிரியர், சுகன்யாவிடம், சினிமா வாய்ப்பை ஏற்குமாறு சொல்கிறார். வீட்டில் அம்மா, அப்பா, சொல்லி கேட்காத சுகன்யா, தலைமை ஆசிரியர் சொல்லி, நடிப்பதற்கு சம்மதிக்கிறர்.

ஆஸ்தான ஜோதிடர்: எனினும், சுகன்யாவின் பெற்றோர், தங்களுடைய ஆஸ்தான ஜோசியரிடம், சுகன்யாவின் ஜாதகத்தை தந்து நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்கலாமா? என்று கேட்கிறார்கள். நடிப்பில் உச்சத்துக்கு சுகன்யா போகப்போகிறார் என்று ஜோதிடர் செல்ல்லிய பிறகே, வீட்டில் நடிப்புக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.

ஆனால், இவரது முதல் படம் 1991-ல் வெளிவந்த புதுநெல்லு புது நாத்து. பாரதிராஜாவிடம் அடி வாங்காமல் தப்பித்த ஒரே நடிகை சுகன்யா மட்டும்தான்.. முதல் படமே, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல கதாநாயகிஅந்தஸ்தையும் தந்தது.
அடுத்தடுத்து, பல படங்கள் குவிகின்றன. அப்போது அரசியல்வாதி ஒருவரின் தொடர்பும் ஏற்படுகிறது.. அதிமுகவின் முன்னாள் அமைச்சரான அவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அமைச்சரும்கூட.. இன்று திமுக அமைச்சரவையில் இருக்கார்.

தங்க நகைகள்: அமைச்சருக்கும், சுகன்யாவுக்கும் கிசுகிசு தொற்றிக்கொண்டது. சுகன்யாவுக்கு பெசன்ட்நகரில் உல்லாச பங்களா, ஈசிஆர் ரோட்டில் ரிசார்ட், தங்க நகைகள், விலைஉயர்ந்த கார்கள் போன்றவற்றை அமைச்சர் தந்ததாக அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டன.

இப்படியெல்லாம் செய்திகள் வந்தபோதும் அதை சுகன்யா மறுக்கவில்லை. 3 துறைகளுக்கும் அமைச்சரான அவரது வீட்டில் ரெய்டு நடந்தபோது, சுகன்யா வீட்டிலும் ரெய்டு நடந்தது. அந்த அமைச்சருடன் 5 ஆண்டு காலம் தொடர்பில் சுகன்யா இருந்ததாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. சுகன்யாவை வைத்து தயாரிக்கப்படும் பல படங்களுக்கு பைனான்சியர் அந்த அமைச்சர்தான் என்றும் பரபரப்பாக பேசப்பட்டன. மொத்தத்தில் அமைச்சரின் பினாமியாகவே சுகன்யா அப்போது பார்க்கப்பட்டார்.

சர்ச்சைகள்: அதேபோல சின்ன சங்கராச்சாரியாருடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார் சுகன்யா. சரத்குமாருடன் பல படங்கள் நடிக்கவும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும் பேசப்பட்டது.. இப்படி சர்ச்சைகளுக்கும் சுகன்யாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு" என்றெல்லாம் அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+