Jai hanuman serial: அனுமன் அன்னை சீதா கொடுத்த முத்து மாலையை அறுத்தெறிந்தது ஏனோ?
சென்னை: உனக்கு என்ன தருவேன் அனுமன்..நீ இன்னல்களைத் தீர்ப்பவன் என்று பிரபு ஸ்ரீராமர் புலம்புகையில், அன்னை சீதா தேவி அனுமனுக்கு பரிசாக அளித்த தெய்வாம்சம் பொருந்திய முத்து மாலையை அனுமன் அறுத்தெறிந்து விடுகிறான்.
ராவணனை வதம் செய்து, அன்னை சீதையை மீட்டு ராமன் லட்சுமணன் மற்றும் அனுமன் சேனையோடு அயோத்தி வந்தாகி விட்டது.
ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகமும் செய்து முடிந்த நிலையில்தான் ராமர் அனுமனுக்கு நன்றிக் கடனாக என்ன செய்வது என்று வேதனையோடு வினவுகிறார்.

அனுமன் கண்ணீரோடு
அனுமன்....நீ இல்லாமல் எந்த ஒரு காரியமும் அரங்கேறி இருக்காது. இன்னல்களைத் தீர்ப்பவன் நீ. உனக்கு கைமாறாக என்னால் என்ன செய்ய இயலும் என்று ராமர் வேதனையோடு பேசுவதை அனுமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் உயிருக்கும் மேலாக வணங்கும் பிரபு தனக்கு கைமாறு செய்வதா என்று கலங்குகிறான்.

தன்யனானேன் நான்
பிரபு எனக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் தங்களது காலடியில் எனக்கு ஒரு இடம் அருளுங்கள் பிரபு என்று கண்ணீர் விடுகிறான் அனுமன். இதை கேட்ட ஸ்ரீராமர், அனுமன் நான் தன்யனானேன்...நீ என்னுடனே இருக்கலாம் என்று வரம் அருளுகிறார். அப்போதும் அன்னை சீதா தேவிக்கு அனுமனுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம்.

தெய்வாம்ச முத்துமாலை
அனுமன் என் திருப்திக்கு எனக்கு சுவாமி உன்னிடம் கொடுத்து அனுப்பிய தெய்வாம்சம் பொருந்திய முத்துமாலையை உனக்கு தர விரும்புறேன். அது உன்னிடம் இருப்பதுதான் முறை என்று அந்த முத்துமாலையை அனுமனிடம் சீதா தேவி தருகிறார்.

முத்துமாலை அறுந்தது
மண்டியிட்டு அதை வாங்கிய அனுமன் முத்து மாலையை அறுத்து விடுகிறான். சபையில் அனைவரும் பதற என்ன அனுமன் முத்து மாலையை அறுத்து விட்டாய் என்று அன்னை கேட்கிறார். அன்னையே இந்த முத்துமாலை என்ன அத்தனை உசத்தியா இதிலென்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூறுகிறான் அனுமன்.

அனுமன் பொறுமை
அனைவரும் கோபமாக அனுமனைப் பார்க்க, இதில் என் பிரபுவின் அம்சம் எதுவும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் தாயே. அப்படி ஒன்றும் இது பெரிதல்ல என்றும் கூறுகிறான்.அனைவரும் கோபமாகப் பார்க்க ,என்னுள் எல்லாமுமாக பிரபு இருக்கும்போது இந்த முத்து மாலையில் ஒன்றும் இல்லையே என்று கூறுகிறான் அனுமன்.

அண்ணன் என்னுள்தானே
லட்சுமணன், அண்ணன் என்னுள்தானே இருக்கிறார்... அனுமன் இப்படி சொல்கிறாரே என்று நினைக்க.. அப்போதுதான் சிறிது தூரம் நடந்து சென்று தனது நெஞ்சை பிளந்து ஸ்ரீராமர் அன்னை சீதா தேவியை காண்பிக்கிறார். அனைவருக்கும் சிலிர்ப்பு.. கண்களில் நீர் லட்சுமணன் மட்டும் கோபமுகத்தோடு இருக்கிறார் ஏன் என்று தெரியவில்லை.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications