Kaatrin Mozhi Serial: போட்டுத் தாக்கு அவனை முறத்தால போட்டுத் தாக்கு!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கண்மணியை பாலியல் ரீதியாக ஒருவன் துன்புறுத்துவதை ரொம்ப மனம் நொந்து எழுதி இருந்தோம். கண்மணி வாய் பேச முடியாத பெண் அவள் ஒரு கயவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். அவள் இன்று அந்த கயவனுக்கு கொடுக்கிறாள் பாருங்கள் சரியான பதிலடி!
இவள் மனம் விட்டுப் பேச வீட்டில் யாரும் இல்லை. இவளை வெறுக்கும் பாட்டி, முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று கண்டிஷனோடு மனைவியுடன் வாழும் கணவன் என்று வாய் பேச முடியாத கண்மணியின் குடும்பம்.
அம்மா கொடுக்கும் தைரியம் ஒன்றினால் மட்டுமே வாழும் கண்மணி, தன்னை சிதம்பரம் தப்பாக தொட்டதை யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள் அழுதுகொண்டு இருக்கிறாள்.

கண்டுபிடிச்சுட்டாங்க அம்மா!
பெத்த அம்மாவாச்சே கண்மணியின் துயரத்தை அவள் வரைஞ்சு வச்சு இருந்த வரைபடம் மூலம் கண்டு பிடிச்சுட்டாங்க. சிதம்பரத்தை கேட்கிறான் வான்னு கண்மணியை கையைப் பிடிச்சு இழுக்க அவள் வேண்டாம் என்று சைகை காண்பித்து அழறா. உன்னை கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சுக்காத கண்மணி.அம்மா நான் இருக்கேன்.உங்க அப்பா நீ எங்க வீட்டு மகா லட்சுமின்னு கொண்டாடும் நாள் வரும்னு சொல்லி தேத்தறாங்க.

விஷயத்தை புருஷனிடம்
விஷயத்தை புருஷனிடம் சொல்ல, நீ என்ன சொல்லிட்டு என் கூட வாழ வந்தே.இந்த வீட்டில் அவள் ஒரு ஜடமாத்தான் இருக்கணும். என் கண்ணில் படவே கூடாதுன்னு சொன்னபிறகு அதுக்கு சம்மதிச்சுத்தானே என் கூட வாழற இப்போ திடீர்னு நம்ம பொண்ணு வந்து கேளுங்கன்னு சொல்றே. என்னை பொறுத்த வரைக்கும் என் மகன் மட்டும்தான் பிள்ளை. கடமைக்கு ஒரு பொண்ணை வளர்த்துக்கிட்டு இருக்கேன். கடைசியில இவ இந்த வீட்டில் பிண்டம் மாதிரிதான்னு சொல்லிட்டு போறார்.

சிதம்பரம் வீட்டுக்கு
சிதம்பரம் வீட்டுக்கு மறுபடியும் பால் கொண்டு போகணுமே என்கிற கவலையில் இருக்கும் கண்மணிக்கு கைக்கொடுக்கிறாள் தோழி.வா என்று கூடவே அவளை அழைத்துச் சென்று இவனுக்கு நீ என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறியோ அதை குடு கண்மணின்னு சொல்றா.

சிதம்பரத்தை கண்மணி
சிதம்பரத்தை கண்மணி முதலில் கையால் அடிச்சுட்டு, பிறகு முறத்தை எடுத்து வந்து அதால் அடிச்சு வெளுத்து வாங்குகிறாள். அதை வீடியோ எடுக்கும் தோழி.. இனிமேலும் வாலாட்டின, இதை சோஷியல் மீடியாவில் போட்டு ஹேஷ்டேக்காகி விடுவேன்னு மிரட்டறா.
இந்த காலத்துக்கு இந்த தைரியம்தாங்க பொண்ணுங்களுக்கு வேணும்!
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications