Pandian Stores Serial: ஆனந்தம் பாணியில் பயணிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்
சென்னை: ஆனந்தம் பட பாணியை அச்சு பிசகாமல் காப்பி அடித்து அதன் வழியில் பயணித்து சீரியல் ஆர்வலர்களை தன் வசம் ஈர்த்து வருகிறது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அண்ணன் தம்பிகள், அவர்களுக்கு வாய்த்த மனைவிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
ரொம்ப மென்மையான கதை... எந்தவித வன்முறை காட்சி ஏன் குடும்ப சண்டை கூட அவ்வளவாக இல்லை. மென்மையான குடும்ப கதை கொண்ட சீரியல் என்று மின்னுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பொறுப்பு வந்துருச்சுன்னு
பெரிய அண்ணன் ரெண்டாவது அண்ணனோடு கடைக்குட்டி கண்ணன் கோயில் வாசலில் டீ கடையில் தீபாவளி துப்பாக்கி வச்சுக்கிட்டு, வெடி வெடிப்பதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது அண்ணன் சொல்கிறார்... காலேஜ் எல்லாம் போயிட்டே.. வளர்ந்துட்டேன்னு நினைச்சேன்.. என்னடா இன்னும் தீபாவளி கேப் வெடிக்கறதை பத்தி பேசிகிட்டு இருக்கேன்னு நொந்துக்கறார்.
எப்புடி கோத்துவுடுது
ஆமா...கேக்கணும்னு நினைச்சேன்...அதென்ன கோயிலில் ஜீவா அண்ணன் பேரில் மட்டும் சிறப்பு பூஜை? கதிர் அண்ணன் உனக்கு தொக்கான்னு கடைக்குட்டி கண்ணன் கேக்கறான். பயபுள்ள.. எப்படி கொத்து வுடுது பாருன்னு முனகறார் அண்ணன்.
நாங்களும் சொல்வோம்ல
என்னாடா இவன்..ஜீவாவும் மீனாவும் நல்ல செய்தி சொன்னாங்க.. அதனால அவங்க பேரில் சிறப்பு பூஜை செய்ய சொன்னேன்னு அண்ணன் சொல்ல.. கடைக்குட்டி கண்ணன் சொல்லிக்கறான்... ஒரு பக்கமா திரும்பிகிட்டு நாங்களும் சொல்வோம்லன்னு.. ஆனா, என்ன விஷயம்னு இந்த பையனுக்கு தெரியாது.
குடும்ப நகைச்சுவை
இப்படி குடும்பத்தில் தெரிஞ்சுக்க வேண்டிய தெரிஞ்சுக்க கூடாத விஷயங்களை நகைச் சுவையாக விரசம் இல்லாமல் காண்பித்து இருப்பது ரசிக்கும்படியாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே உரித்தான நல்லதொரு அம்சம். இதுவே சீரியல் ஆர்வலர்களை இந்த சீரியல் முன் இரவு எட்டு மணிக்கு கட்டிப்போட்டு வைத்துள்ளது.