Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது மனைவியுடன் பெங்களூரில் தேனிலவு! அதிர்ச்சி அடைந்த நடிகர் சந்திரபாபு! மனதை கல்லாக்கி செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரபாபுவின் திருமண வாழ்க்கையில் நடந்ததைதான் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அந்த 7 நாட்கள் திரைப்படமாக எடுத்தார் என சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் சந்திரபாபு. இவர் காமெடியனாக பல படங்களில் அறிமுகமானார். அத்துடன் பாடல்களை நன்றாக பாடுவார். குங்கும பூவே கொஞ்சு புறாவே.. பிறக்கும் போதும் அழுகின்றான் உள்ளிட்ட பாடல்களை சந்திரபாபு பாடியுள்ளார்.

Real story of Comedian Chandrababu goes trending in social media

இவருக்கு இசை, ஓவியம், இயக்குநர், சிற்பம் அமைப்பது என அனைத்து திறமைகளையும் தன்னகத்தே வைத்திருப்பவர். இவருடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகியாவார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்.

நடிகர் நாகேஷுக்கு தனி பாணி என்றால் சந்திரபாபுவுக்கும் தனி பாணி. டாப் ஹீரோக்களான எம்ஜிஆர், சிவாஜிக்கு நிகராக போற்றப்பட்டவர் சந்திரபாபு. அவர்களை விட அதிக சம்பளத்தையும் இவர் பெற்றிருந்தார். இவர் கவலை இல்லாத மனிதன், குமாரராஜா உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

அதனால் மீண்டும் அவர் காமெடி டிராக்கிற்கே சென்றார். புகழின் உச்சத்தில் இருந்த சந்திரபாபு 47 வயதில் காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய திருமண வாழ்க்கை குறித்து தற்போது சமூகவலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதை அறிந்த சந்திரபாபு தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கதையை மையமாக வைத்துத் தான் நடிகர் பாக்யராஜின் இயக்கத்தில் அந்த 7 நாட்கள் படம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் உண்மையில்லை என்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். அங்கு மனைவி சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்த சந்திரபாபு, பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என புரிந்து கொண்டு அவர் காதலனுடன் சேரட்டும் என அவரை விட்டு பிரிந்துவிட்டார். பின்னர் அவருடைய மனைவி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

Real story of Comedian Chandrababu goes trending in social media

மனைவிய பிரிந்தாலும் அவருக்கு சந்திரபாபு நிறைய உதவிகளை செய்துள்ளாராம். இதையடுத்துதான் சந்திரபாபு மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அவர் சில படங்களை இயக்கிய நிலையில் அவை பெரிதாக கைகொடுக்காததால் கடன் தொல்லை ஏற்பட்டு அவருடைய வீடு ஜப்தி செய்யப்பட்டது. இதனால் சந்திரபாபு நிலைகுலைந்தார். 1974 இல் சந்திரபாபு காலமானார் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+