ராஜா ராணி சீரியலை விட்டு விலகிய கதாநாயகி... சந்தியா கேரக்டரில் இனி வேறு நடிகை.. அவரே கூறிய காரணம்?
ராஜா ராணி சீரியல் சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விசுவநாதன் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இருந்து கதாநாயகி சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார்.
அடுத்ததாக சந்தியாவாக ரியா நடிக்க தொடங்கி இப்போது ஒரு வருடம் முடிவடைய இருக்கும் நிலையில் திடீரென்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டாவது பாகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் முதல் பகுதி முடிவடைந்து தற்போது இரண்டாவது பகுதி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணட் இயக்கி வருகிறார். முதல் பாகத்தையும் அவர்தான் இயக்கியிருந்தார். ராஜா ராணி 2, 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கேரக்டரில் சித்து நடித்து வருகிறார். சந்தியா கேரக்டரில் ஆலியா மானசா நடித்து வந்தார். ராஜா ராணி முதல் பாகத்தில் கதாநாயகியாகவும் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அவரே நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

ஆலியா மானசா விலகல்
ஆலியா மானசா விலகியதற்கு பிறகு அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாத் சந்தியா கேரக்டரில் நடிக்க வந்தார். ரியா விஸ்வநாத் சந்தியா கேரக்டரில் அறிமுகம் செய்து வைத்த ஆலியா மானசா ப்ரோமோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனி சந்தியாவாக இவர்தான் கடைசி வரைக்கும் தொடர்வார் என்று அப்போது ஆலியா கூறியிருந்தார். தற்போது ஆலியா மானசா சன் டிவியில் வேற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது சந்தியா ஆசைப்பட்ட மாதிரி சொந்த ஊரிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக மாறி இருக்கிறார்.

தொடரும் பிரச்சனைகள்
சந்தியாவிற்க்கு ராஜா ராணி சீரியலில் பிரச்சனை இல்லாத நாலே இல்லை என்று சொல்லும் வகையில் தினமும் ஒவ்வொரு பிரச்சனையும் வந்து கொண்டே இருக்கும். சாதாரணமாக வீட்டில் இருந்த நிலையிலே அப்போதே அவருக்கு தீவிரவாதிகள் பிரச்சனை கொடுக்க, இப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில் இப்போதும் அவருக்கு பிரச்சனை ஓய்ந்தபாடு இல்லை. ஆனாலும் அதற்கெல்லாம் சலிக்காத ஒரு கேரக்டரில் ரியா நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

உருக்கமான வார்த்தை
நான் ராஜா ராணி சீரியல் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் நான் ஒரு லைவ் வீடியோ போட்டதில்லை. பட் இப்போ போடுறேனா அதற்கு காரணம் இனி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நான் இல்லை. வேற ஒருத்தங்க நடிக்கப் போகிறார்கள். இனி ரியா சந்தியாவாக ராஜா ராணி 2 வில் நடிக்கப் போவதில்லை. இதை நாம் மக்கள் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன், ஆசைப்பட்டேன். ஒரு வருஷத்தில் பாக்குறவங்க எல்லாம் சந்தியா சந்தியா என்று பேசும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். இனி நான் சந்தியாவாக இல்லை. புது சந்தியாவாக வேறொருத்தங்க நடிக்கிறாங்க. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

புது தொடக்கம்
அது மட்டுமல்லாமல் இன்று காலையிலே அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புது தொடக்கம் என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், அப்போது இவர் புது சீரியலில் எதுவும் கமிட் ஆகி இருக்கிறாரா? என்றும், சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால் அது சந்தோஷமான விஷயம் தானே எதற்காக இவர் சோகமாக பேச வேண்டும் என்றும் பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த வீடியோவில் பேசும் போதே அவருடைய முகம் டல்லாகவும் அழுதது போன்று இருப்பதாகவும், அதனால் ஏதேனும் பிரச்சனையா? என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கமெண்ட்களில் கேட்டு வரும் நிலையில், இவர் எதற்காக சீரியலை விட்டு விலகுகிறார் என்ற காரணத்தை கூறவில்லை. அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து இவரே சந்தியாவாக வேண்டும் என்று பலர் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications