Samantha: நடிகை சமந்தாவை சுற்றி வளைத்து.. முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்! அப்போ நிதி அகர்வால், இப்போ இவரா?
சென்னை: சில நாட்களுக்கு முன்பு நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்களால் நடந்த ஒரு தொந்தரவு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. பிரபாஸ் நடித்த ராஜாசாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரை நகர முடியாமல் தவிக்க வைத்தனர். அதேபோல ஒரு சம்பவம் இப்போது நடிகை சமந்தாவிற்கும் நடந்திருக்கிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர்கள், நடிகைகளின் மீது இருக்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு இடத்திற்கு ஏதாவது நடிகையோ, நடிகரோ வருகிறார் என்று சொல்லிவிட்டால் இருக்கிற வேலை எல்லாம் விட்டுவிட்டு மொத்தமாக அங்கே சென்று கூறி விடுகிறார்கள். அதிலும் சம்பந்தப்பட்ட நடிகர்கள், நடிகைகளுக்கே பயம் வருகிற மாதிரி சில ரசிகர்கள் செயல்பாடுகள் இருக்கிறது.

சில நடிகைகள், நடிகர்கள் சோசியல் மீடியாவில் ஏதாவது போஸ்ட் போட்டால் கூட இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? என்ற கமெண்ட்கள் அதிகமாக வரும் ஆனால் நடிகைகள் ஒரு இடத்திற்கு வருகிறார்கள் என்றால் அங்கு முண்டியடித்துக் கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதேபோலத்தான் சமீபத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிதி அகர்வாலுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு நடிகை நிதி அகர்வால் தன்னுடைய காருக்கு செல்வதற்காக முயற்சி செய்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நகர முடியாமல் இழுத்து துன்புறுத்தி இருந்தனர். இது பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது.
அந்த சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில் இப்போது நடிகை சமந்தாவிற்கும் அதே போல நடந்திருக்கிறது. நேற்று ஒரு கடை திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக பலர் போட்டி போட அதில் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்து இருக்கின்றனர். சமந்தாவாலும் அங்கே இங்கே நகர முடியாமல் இருந்திருக்கிறார்.
அப்போது பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications