குழந்தைகளை வைத்து இப்படியா பண்ணுறது? ஆபத்தானது! ஆலியா மானசாவை விமர்சிக்கும் ரசிகர்கள்
சென்னை: சீரியல் நடிகை ஆலியா மானசா தன்னுடைய குழந்தைகளோடு வெளியிட்ட வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் தன்னுடைய கழுத்தில் போட்டு இருக்கும் துப்பட்டா மூலமாக குழந்தைகளின் கைகளை கட்டி இருக்கும் ஆலியா மானசா சேட்டை செய்யும் குழந்தைகளை நான் இப்படித்தான் சமாளிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதைப் பார்த்த பலர் ஆலியாவை திட்டி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக இளம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ஆலியா மானசா முதல் சீரியலிலேயே திரைப்பட கதாநாயகிக்கு இருக்கும் அளவிற்கு அதிக அளவில் ரசிகர்களை உருவாக்கி விட்டார். பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து ஆலியா மனசா திடீரென்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தியை கூறியிருந்தார்.

அது வேறொன்றுமில்லை அந்த சீரியலில் அவரோடு ரீலாக நடித்த சஞ்சீவை தான் ரியலாக காதலிப்பதாக கூறியிருந்தார். தன்னுடைய காதலை ரசிகர்களிடம் பகிர்ந்த ஒரு சில நாட்களிலேயே திருமணத்தை முடித்துவிட்டு ஆலியா மானசா முதல் சீரியல் முடிவடையும் போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகிவிட்டார்.
அதைத் தொடர்ந்து சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்த ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அவருடைய கணவர் சஞ்சீவ் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் மற்றொரு சீரியலில் நடித்து வந்தார் அதுவும் முடிவடைந்ததும் சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகனாக மாறிவிட்டார். அப்போது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
பிறகு இரண்டாவது குழந்தையும் பிறந்ததும் உடல் எடை கூடி இருந்த இவர் உடற்பயிற்சி மூலமாக மீண்டும் பழைய நிலைக்கு மாறி சன் டிவியில் இனியா சீரியலில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். விஜய் டிவி நடிகையான இவர் சன் டிவியில் அறிமுகமானதும் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. ஆனாலும் சீரியல் தொடங்கி இப்போது வருடங்களை தாண்டிவிட்டது.
இந்த நிலையில் ஆலியா மானசா தன்னுடைய மகன் மற்றும் மகளோடு சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் சுடிதார் போட்டிருக்கும் ஆலியா அதற்கான ஷாலை தன்னுடைய கழுத்தில் போட்டு இரண்டு முனையையும் இரண்டு குழந்தைகளின் கைகளில் கட்டி இருக்கிறார். பிறகு அந்த ரெஸ்டாரண்டுக்குள் குழந்தைகளை முன்னே நடக்க விட்டு பின்னாடி ஆலியா வந்து கொண்டிருக்கிறார்.
சேட்டை செய்யும் குழந்தைகளை இப்படித்தான் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது என்று ஆலியா ஜாலியாக அந்த வீடியோவை பகிர அது இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கைகளை ஆலியா இப்படி கட்டி இருக்கிறாரே ஒருவேளை கைகளை வேகமாக இழுத்தால் குழந்தைகளுக்கு வலி ஏற்படுவதற்கோ அல்லது மணிக்கட்டில் பிரச்சனை ஏற்படுவதற்கோ வாய்ப்பு இருக்கிறது என்று சிலர் கூறி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் இரண்டு குழந்தையும் அந்த பக்கமும் இந்த பக்கமும் போனால் நீங்கள் கழுத்து இறுகி போய் சேர்ந்து விடுவீர்கள் என்று ஆலியாவை பயமுறுத்துகின்றனர். அதுபோல இன்னும் ஒரு சிலர் குழந்தைகளை இப்படி நாய்களைப் போன்று கட்டி வைத்திருப்பது சரியான முறை கிடையாது என்றும் கூறி வருகிறார்கள். இப்படியாக இப்போது ஆலியா மானசா வீடியோவிற்கு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications