சரண்யாவின் வெள்ளை மனசுக்குள் கடவுள்.. உருக வைக்கும் உதவி!
சென்னை: சீரியலில் கதாநாயகியாக நடிப்பது ஒன்றும் பெரிதல்ல நிஜத்திலும் அந்த அளவில் வாழ்வதுதான் பெரியது .
என்ன சம்பாதித்தாலும் தனக்கு போகத்தான் தான தர்மம் என பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த லாக்டோன் நேரத்திலும் தனது மனசை வெளிப்படுத்தியுள்ளார் சரண்யா துராடி.
தனக்கு படப்பிடிப்பு எதுவுமே இல்லாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட தற்போது ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா செய்த செயல்தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

டிவி தொகுப்பாளர்
சரண்யா துரோடி முதன்முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியலில் துறுதுறு கேரக்டரில் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்தவர். தன்னுடைய அழகாலயும் போல்டான கேரக்டரையும் மிக்ஸ் பண்ணி இந்த சீரியலில் அதே துடுக்குத்தனம் தோடு இவரது நடிப்பு இருப்பதால் அனைவரின் மனதிலும் பசைபோல ஒட்டிக் கொண்டார் .

தைரியம்
பெண்ணென்றால் இவர் போல தான் தைரியமாக இருக்க வேண்டும் என அனைவரும் சொல்லும் வகையில் இவருடைய கேரக்டர் அமைந்திருந்ததால் முதல் சீரியலே இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. அந்த சீரியலில் வெற்றிக்கு பிறகு இவருக்கு ஆயுத எழுத்து சீரியல் கலெக்டர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியலில் இவருக்கு முன்பு வேறு ஒரு நடிகை நடித்திருந்தாலும் அவர் பாதியிலேயே விலகி விட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து .

ரசிகர்கள் மனதில் இடம்
ஒரு சீரியலில் பொதுவாக பாதியில் வந்த நடிகை அந்த அளவிற்கு சீரியலோடு எளிதாக செட் ஆகிவிட முடியாது .ஆனால் இவர் இந்த சீரியலோட அப்படியே ஒட்டி ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .போல்டான கேரக்டராக இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு பெண்ணுக்கு இருக்கும் கடமைகளையும் இவர் கதையின்படி செய்திருந்தாலும் பல ரசிகர்கள் ஒரு கலெக்டராக இருந்துகொண்டு இந்த அளவிற்கு இறங்கிப் போக வேண்டாமென இவருக்கு கமெண்ட் போட்டு வந்தனர் .

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் இவர் அது எல்லாம் நடிப்பு தாங்க டைரக்டர் சொல்வதை தான் நான் நடிக்க முடியும் என்னுடைய விருப்பத்திற்கு நான் நடிக்க முடியாது என கூறியிரந்தார் .ஆனாலும் இந்த சீரியல் திடீரென முடிந்ததும் இவர் மட்டுமல்ல இந்த சீரியல் ரசிகர்களும் ரொம்பவே ஏமாற்றம் அடைந்து இருந்தனர். ஆயுத எழுத்து சீரியலுக்கு பிறகு இவருக்கு எந்த புது சீரியல் வாய்ப்புகளும் வராததால் வீட்டில் தான் இருந்து கொண்டிருக்கிறார்.

காதலருடன் போட்டோஷூட்
வீட்டில் இருக்கும் நேரத்தில் தனது காதலருடன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடு் இவர் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். ஃபிரியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர் .தற்போது இவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் வகையில் இவர் இந்த லாக்டோன் நேரத்தில் பசித்திருக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த வகையில் வீட்டில் சமைத்த உணவினை வழங்கிவருகிறார்.

ஈர மனசு
இவருடைய இந்த குணத்தை தெரிந்து இவருக்கு பலரும் தன்னால் முடிந்ததை இவருடன் இணைந்து செய்ய முன்வந்து இருக்கின்றனர் .அவர்களுக்கு நன்றி தெரிவித்து தான் உணவு கொண்டுசெல்லும் போட்டோஸ் களை பதிவிட்டு வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஒரு நடிகை கண்ணடித்தாள் மட்டும்தான் வைரலாக பரவி வருகிறது .தவிர ஒருவர் உதவி செய்தால் அது யாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். பலரும் ஈசியாக அதனை கடந்து விடுகின்றனர் .

குவியும் பாராட்டு
ஆனால் ஒரு சிலர் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டி வருகின்றனர். அதனால்தான் அவர்கள் தங்களால் முடிந்ததை இவருக்கு பொருளாகவோ பணமாகவோ அனுப்பிவைத்து இவரால் பலபேர் பசியைப் போக்க வைத்துள்ளனர் என தன்னுடைய போஸ்டில் தெரிவித்திருக்கிறார். அதில் கோராணா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையை இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன் .லாக்டோன் என்பதால் தினமும் நானே வண்டியை எடுத்துக் கண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.

மாஸ்க்கின் துணையுடன்
இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணை என்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச்செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது. நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும் .தொடர்ந்து பசியாற்றுவோம் என அந்தப் போஸ்டில் தெரிவித்திருக்கிறார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications