கேரளத்து கசவு கட்டி.. அப்படி ஒரு போஸ்.. பரவசப்படுத்திய ஷிவானி.. மெய் மறந்த ஃபேன்ஸ்!
சென்னை: கேரளத்து கசவு கட்டி.. குண்டு பல்புகளுக்கு மத்தியில் ஸ்டைலாக ஒரு லுக் விட்டுள்ளார் ஷிவானி.
பச்சைத் தண்ணீரும் பத்திக்கும் பார்க்கும் பார்வையால்....கரண்ட் இல்லாம பல்பை எரிய விட்ட ஷிவானியே என்று ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.
ஷிவானி கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

பார்வையிலேயே போதை
ஊரடங்கு நேரம் என்பதால் ஒயின்ஷாப் எல்லாமே மூடிக் கிடக்கும் நேரத்தில் பார்வையாலேயே பார்ப்பவர்களுக்கு போதை ஏற்றும் ஷிவானியின் லேட்டஸ்ட் கேரளா போட்டோஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் படு வைரலாக பரவி வருகிறது .என்னதான் மாடல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது நடத்தியிருக்கும் போட்டோஷூட் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் கலக்கலாக இருக்கிறது.

ரொம்பப் பிடிச்சிருக்கு
அதுவும் கேரள உடையில் தமிழ் பெண்ணின் நாணத்தோடு தலைமுடியை சரி செய்தபடி தனக்கு வெட்கம் வருகிறதோ இல்லையோ பார்ப்பவர்களுக்கு வெட்கப்பட வைக்கும் வகையில் வித்தியாசமாக போட்டோ வெளியிட்டிருக்கும் ஷிவானியின் இந்தத் திறமை பலருக்கும் பிடித்திருக்கிறது. ஷிவானி என்றாலே இன்ஸ்டாகிராம் இன் பலபேருக்கு எனர்ஜியாக தான் .

கலாய்க்கும் ரசிகர்கள்
இவருடைய ஒவ்வொரு போஸ்ட்டும் செம வைரலாக மாறிவிடும். அதுவும் இவருக்காக ரசிகர்கள் பார்த்து பார்த்து கமெண்ட்களையும் போட்டு வருதுகின்றனர் .கலாய்க்கும் ரசிகர்களும் அவருக்காக உருகி உருகி கமெண்ட் போட்டு வருகிறார் .ஆட்டம் போட்டாலும் நான் வேற ரகம் என தன்னைப் பற்றி எந்த அளவிற்கு கலைத்தாலும் கண்டுகொள்ளாமல் வீடியோஸ் வெளியிட்டுவருகிறார் ஷிவானி.

ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன பிறகு ரசிகர்களை கண்டு கொள்ளவில்லை என பல ரசிகர்கள் புலம்பி வந்தனர் .ஆனால் மீண்டும் பழைய ஃபாமில் களமிறங்கியிருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறார். இவரை ட்ரோல் பண்ணியே பல யூடியூப் சேனல்களும் நன்றாக பிரபலம் ஆகிவிட்டது .அவர்களும் கூட இவர் போட்டோஸ்கள் இல்லாமல் வாடி போய் இருந்தனர்.

அவர்களுக்கு வாழ்வு
தற்போது அவர்களுக்கும் வாழ்வு கொடுத்திருக்கிறார். மீண்டும் இவருடைய வீடியோக்களை இவர் வெளியிட்டதும் குஷியாகி போயி அவர்களும் தங்கள் பங்குக்கு அவருக்காக ஹாட்டின்களை பறக்கவிட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர் .அதுவும் தற்போதைய போட்டோ வில் இவரை அணு அணுவாக ரசித்து கவிதைகளை பொழிந்து வருகின்றனர் .இதற்கு முன்பு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது புசுபுசுவென மாறிவிட்டார் .

ரொம்பத்தான் சிக்கனம்
ஆனால் தற்போது சிக்கனமாக மாறி கதாநாயகி ரேஞ்சுக்கு களம் இறங்கி இருக்கிறார் .இவருக்கு சீக்கிரமாக திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டி இவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் .ரசிகர்களின் ஆதரவினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது போல சீக்கிரத்தில் இவரை திரைப்படத்திலும் பார்த்துவிடலாம் போல.

புன்னகை போதுமே
புடவையில் இவர் போட்டோஸ் போட்டிருந்தாலும் கழுத்தில் எந்த ஆபரணமும் அணியாமல் பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .அதனால் அவருடைய ரசிகர்கள் இவரை பொன் நகைகள் வேண்டாம் ஷிவானிக்கு புன்னகையே போதும் என வர்ணித்து வருகின்றனர் .அதுவும் தற்போது அவருடைய கன்னத்தில் இருக்கும் அந்த ஒற்றை பருவையும் பலரும் ரசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications