சிக்கென மாறிய சின்ன இடை.. சிலிர்க்க வைத்த ஷிவானி!
சென்னை: பார்க்கும் பார்வையால் பலரை பதறவைக்கும் ஷிவானி தற்போது இடையழகை இமைக்காமல் பார்ப்பதற்காக கட்டியிருக்கும் தாவணியை கலக்கலாக தூக்கி காட்டி பார்ப்பவர்களுக்கு வேற லெவல் தரிசனம் கொடுத்துள்ளார்.
என்னதான் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது என்றாலும் தற்போது மக்களும் அதனோடு பழகிவிட்டனர் .
தடுப்பூசியைப் போட்டுக் கொண்டும் முக கவசத்தை ஆயுதமாக ஏந்தி பலர் அன்றாட பணிகளை செய்ய தொடங்கியிருந்தாலும் மனதில் பெரும் அழுத்தத்துடன் தான் இருந்து வருகின்றனர்.
பறக்கும் கவலைகள்
முன்னல்லாம் தங்களுடைய மனக்கவலையை தீர்ப்பதற்காக டிவிக்களை நம்பிக் கொண்டிருந்தனர் .அதற்கு பிறகு வாழ்க்கையில் பல வளர்ச்சிகளை நாம் அடைய அடைய ஒடிடி யிலும் இணையத்தளங்களிலும் புது படங்களை பார்த்துக்கொண்டு புது புது நிகழ்ச்சிகளை பார்த்து மனக்கவலையை தீர்த்து வருகிறோம் .ஆனால் தற்போது சூட்டிங் எல்லாம நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரணத்தால் டிவி சேனல்கள் முதல் இணையதளங்கள் வரை அனைத்தையும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர் .
நாங்கதான் இருக்கோம்ல
இதனைப் பார்த்து காண்டாகி இருக்கும் நேரத்தில் தான் நடிகைகள் பலர் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்க என ஜாலியாக போட்டோஷட் நடத்தி மக்களுக்கு மன அழுத்தத்தை தீர்த்து வருகின்றனர். அதில் ஷிவானியின் பங்கு பெரும் பங்காக இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்து தனக்குன்னு சினிமா வட்டாரத்தில் ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய இவர் சமூக வலைத்தளத்தில் விட்டுவைக்கவில்லை .
சீரியல் வாய்ப்பு
இன்ஸ்டாகிராம் பேஸ்புக் என அனைத்து இணைய தளங்களிலும் கொடிகட்டி பறந்து வருகிறார் .இவர் டிக்டாக்கில் பிரபலமாக தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டியதால் தான் அதனை பார்த்து இவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய திறமையை தடையில்லாமல் நிரூபித்து வருகிறார். எப்போதுமே இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து போட்டோஷூட் நடத்துவார்.
குவியும் லைக்குகள்
ஆனால் கொஞ்ச நாட்களாக இவர் போட்டோஷூட்டில் இருந்து விலகி இருந்தாலும் தற்போது இந்த ஊரடங்கு காரணமாக மீண்டும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் .பல ரசிகர்கள் இவரை நம்பி இருக்கின்றனர் .தினமும் இவர் போஸ்ட் போட்டதும் இவருக்கு கமெண்டுகளையும் லைக்களையும் போடுவதுதான் அவர்களுடைய வேலையாகவும் இருந்து வருகிறது .
பதிலளிக்க நேரமில்லை
கமெண்டுகளுக்கு பதிலளிக்க கூட நேரம் இல்லாமல் பிஸியாக இருந்தாலும் அடுத்த நாள் வேற லெவல் போஸ்ட் போட்டு கோபமாகும் ரசிகர்களை கூல் பண்ணி விடுகிறார். இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அது வைரல் போஸ்ட் தான் ஆனால் தற்போது தன்னுடைய கொடியிடை தெரியும் வகையில் தாவணியை ஒதுக்கி காட்டி கலக்கலான காந்த பார்வையால் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் .இந்த போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.