பாடகி கல்பனா தூக்க மாத்திரையை சாப்பிட்டு.. மன அழுத்தமா? தற்கொலை முயற்சி? கல்பனாவின் மகள் பரபர பேட்டி
சென்னை: பிரபல பாடகி கல்பனாவின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து, தற்போது அந்த வெண்டிலேட்டரை டாக்டர்கள் எடுத்துள்ளார்களாம். இந்நிலையில், கல்பனாவின் மகள் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
பிரபல பாடகி கல்பனா, நேற்று முன்தினம், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதையடுத்து, சுயநினைவின்றி படுக்கையறையில் விழுந்துள்ளார்.. இதையடுத்து, கல்பனாவை போலீசார் மீட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடந்து, ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக காலையில் தகவல் வெளியானது.

கல்பனாவின் உடல்நிலை நிலைகுலைந்திருந்தாலும், வென்டிலேட்டரில் இருந்து அவர் வெளியே கொண்டுவரப்பட்டு, சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், கல்பனாவின் உடல்நிலை சற்று தேறி வருவதாகவும் மருத்துவ தகவல்கள் தற்போது கூறுகின்றன.
சுயநினைவுக்கு திரும்பிய கல்பனா
முக்கியமாக கல்பனா சுயநினைவுக்கு திரும்பியிருக்கிறாராம்.. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபிறகு, தற்போது வெண்டிலேட்டரை எடுத்துள்ளனர்.
மற்றொருபுறம் கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் எதுவுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. போலீசாரும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
போலீசாரின் தீவிரமான விசாரணை
எனவே, கல்பனா ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்ற ஆய்வு நடந்து வருகிறது. சொந்த பிரச்சனை காரணமாக, மன உளைச்சலால் இப்படி முடிவை எடுத்திருக்கலாம் என்று யூகமாக சொல்லப்படுகிறது. மற்றொருபுறம், கல்பனாவின் கணவர் மீது சந்தேகங்கள் நிறைய இருப்பதால், அவரது செல்போன் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கல்பனாவின் மகள் திடீரென செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. தன்னுடைய அம்மா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்..
தற்கொலை முயற்சி கிடையாது
செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா மகள், "என் அம்மா எல்எல்பி படித்தவர்.. பிஎச்டி முடித்தவர். இது தற்கொலை கிடையாது, மன அழுத்தத்திற்காக தூக்கு மாத்திரை அதிகமான அளவில் பயன்படுத்தியதால் இது நடந்தது. டாக்டர்கள் பரிந்துரைந்த மாத்திரையை தான் சாப்பிட்டுள்ளார்.. அது சற்று அதிகமாகிவிட்டது.. மற்றபடி, இதை தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம். சில நாட்களில் அம்மா வீடு திரும்புவார்.. எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications