Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜியின் அன்னை இல்லம்.. பிரபு வீட்டை யாரும் அடமானம் வைக்கவில்லை.. சிதறாத சொத்துக்கள்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை, ராம்குமார், துஷ்யந்த் தரப்பில் அடமானமாக கொண்டுபோய் வைக்கவில்லை.. அதற்கான சூழல் நீதிமன்றம் மூலம் வந்தது.. இது தொடர்பாக ராம்குமார் தரப்பில் அப்பீல் போயிருக்கிறார்கள்.. பொதுவாக, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் நடந்து கொண்டாலும், பணம் தரவேண்டியவர்களின் சூழ்நிலை, பிரச்சனைகள், போன்றவைகளையும் ஆராய்ந்துதான் நீதிமன்றம் முடிவெடுக்கும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, அன்னை இல்லம் ஜப்திக்கு வந்த காரணத்தை தெளிவாக கூறியிருக்கிறார்.. இதில், அன்னை இல்லம் அடமானமாக வைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

Television Sivaji Ganesan Properties

அதிகரித்த கடன் தொகை

"கடன் தொகை அதிகமாகிவிட்டதால், கோர்ட்டுக்கு செல்கிறார்கள் பைனான்சியர்கள்.. இதையடுத்து துஷ்யந்தையும், ராம்குமாரையும் கோர்ட்டுக்கு அழைத்தும் செல்லவில்லை. வாய்தா, வாய்தா என்று கோட்டை மதிக்கவில்லை, கோர்ட்டுக்கும் போகவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில், சம்மதம் தெரிவித்து, கடனை கட்டவும் மறுக்கிறார்கள்.. இது கிட்டத்தட்ட கோர்ட்டை அவமதிப்பது போலத்தான்.

சிவாஜி கணேசனின் அன்னை இல்லம்

ஆனால், பணத்தை பெற்றுத்தர வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, கடன் வாங்கியவர்களிடம் சொத்து இருந்தால் அதற்கான முகாந்திரத்தை கொண்டு வந்து காட்டுங்கள் என்று நீதிமன்றம் சொல்கிறது.. இதனால், பிரபு, ராம்குமார் இரு மகன்களுக்கும் அன்னை இல்லம் பொதுவாக இருக்கும் என்பதால், அதையே சொத்தாக கொண்டுபோய் நீதிமன்றத்தில் காட்டுகிறார்கள். காரணம், இதுதான் சிவாஜி கணேசன் குடும்பத்தில் வெளிப்படையாக தெரியும் சொத்து ஆகும்.

இதையடுத்து, நீதிபதியும், இரு மகன்களுக்கும் பங்கு இருக்கும் என்று நினைத்து, அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53240 சதுர மீட்டரில், சுமார் 13000 மட்டுமே ஜப்தி செய்ய உரிமை தருகிறார்கள். இப்படித்தான் ஜப்தி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர, அன்னை இல்லம் என்ற சொத்தை எந்த இடத்திலும், யாரிடமும் ராம்குமார் தரப்பில் அடமானமாக வைக்கவில்லை.

வில்லங்க சொத்து

இப்படி ஜப்தி உத்தரவு செய்யப்பட்டால், இதனை அட்டாச்மென்ட் செய்வார்கள்.. அதாவது, சார் பதிவாளர் அலுவலகத்தில், குறிப்பிட்ட சொத்தை, குறிப்பிட்ட பைனான்சியருக்கு, பணம் தர வேண்டும் என்பதற்காக கோர்ட் ஆர்டர் பெறப்பட்டுள்ளது என்று பதிவு செய்வார்கள். இப்படி ஆர்டரை பதிவு செய்யும்போது, வேறு யாருக்கும் அந்த சொத்தை விற்க முடியாது. இதனால், அது வில்லங்க சொத்தாக கருதப்பட்டுவிடும். ஆனால், அந்த சொத்தை எப்போது விற்பதாக இருந்தாலும், பைனான்சியருக்கு பணம் தந்துவிட்டுதான் விற்க முடியும்.. இதுதான் தற்போது நடந்துள்ளது.

அப்பீல் மனு தாக்கல்

இதற்கு பிறகுதான் ராம்குமார் அப்பீல மனு தாக்கல் செய்துள்ளார்.. "கடனை வாங்கியது துஷ்யந்த் என்பதால், அவருக்கும் அன்னை இல்லத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதில் எனக்கும் சொந்தமில்லை" என்று மனு தாக்கல் செய்துள்ளார்.. சொத்தில் மகனுக்கே பங்கு இல்லாதபோது பேரனுக்கு பங்கு இருக்காது. எனவே, மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். உடனே நாளைக்கே இந்த வழக்கு முடியாது.. ஒரு சூழ்நிலை வரும்போதுதான் கடைசி தீர்ப்பு என்ன என்பது தெரியவரும்.

பொதுவாக, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் நடந்து கொண்டாலும், பணம் தரவேண்டியவர்களின் சூழ்நிலை, பிரச்சனைகள், போன்றவைகளையும் ஆராய்ந்துதான் நீதிமன்றம் முடிவெடுக்கும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+