அந்த மாதிரி ஆடையில் வந்த நடிகை.. இயக்குநர் சொன்னது என்ன தெரியுமா? போட்டு உடைத்த ஹீரோ
சென்னை: இந்தியத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த நடிகை. கதாநாயகர்களுக்கு இணையாக தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில், அவர் தன்னை குறிப்பிட்ட ஒரு செல்லப் பெயரில் அழைக்க வேண்டாம் என்று கூறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
அவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. மேலும், மற்றொரு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதுமட்டுமின்றி, இன்னும் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

திரைப்படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
அந்த நடிகை தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர், 90களில் முன்னணியில் இருந்த நடிகரின் இரெண்டெழுத்து பெயர் கொண்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை அந்த நடிகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
"அந்த நடிகை முதல் நாள் படப்பிடிப்பிற்கு மிகவும் மாடர்ன் உடையில் வந்தார். அதைப் பார்த்த இயக்குனர், 'இந்த நடிகையை அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறினார். 'இவரா இந்த படத்தின் கதாநாயகி? இது சரியாக இருக்காது. மாலையில் வேறு உடை கொடுத்து பார்க்கலாம்' என்று கூறினார்" என்று அந்த நடிகர் கூறினார். பிறகு ஒரு வழியாக படத்தில் செலக்ட் ஆனார். படக்குழுவை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்றுதான் நடிகை அப்படி பளபளப்பான உடலையும் காட்டும் வகையில் ஆடை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படம் அதற்கானது அல்ல. பாந்தமாக நடிக்க வேண்டியது என்பதால் இயக்குநர் சீறியுள்ளார்.
வேற லெவல் வளர்ச்சி
ஒரு காலத்தில் திரைப்படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை, இன்று இந்தியத் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களையும் தடைகளையும் சந்தித்தாலும், தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
பல சவால்களை எதிர்கொண்டாலும், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, தனது நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டார். பின்னர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
அவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார். இன்று, அவர் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார். மேலும், பல இளம் நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார். ஆரம்பத்தில் விமர்சித்தவர்களே இன்று அவரது திறமையையும் சாதனைகளையும் பாராட்டி வருகின்றனர். புரிந்திருக்கும் அல்லவா..












Click it and Unblock the Notifications